Friday, August 7, 2009

ப‌ற்க‌ளி‌ன் செய‌ல்

நம்முடைய உடம்பில் மிகவும் வலுவான விஷயம் என்னவென்றால், அது பல்லின் மீது இருக்கும் எனாமல்தான். இது யானையின் தந்தத்தை விட வலுவானது எ‌ன்று ‌விய‌‌க்‌கிறது மருத்துவம்.பெரும்பாலானோர் பற்களை பராமரிப்பதற்கு அதிக முக்கித்துவம் கொடுப்பதில்லை. பல் தானே என்று அலட்சியமாக இருந்துவிடுவது உண்டு. இதனால், காலப்போக்கில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும்.

பலரது பற்கள் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இது புளுரோஸிஸ் என்னும் நோயின் அறிகுறி.

இதை ஆரம்பித்திலேயே கவனித்து குணப்படுத்திவிட வேண்டும். தவறினால் இந்த கறைகள் பற்களில் நிரந்தரமாக தங்கிவிடும். பின்னர் இது தொடர்பான பல்வேறு நோய்களுக்கும் வழி வகுத்துவிடும்.

அதோடு, புளோரைடு கலந்த பற்பசைகளையும் தவிர்த்துவிட வேண்டும். குடிநீரில் புளோரைடு அளவு குறைவாக இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும்.

இந்த நோய் தாக்கியவர்கள் அலுமினியம், பொட்டாசியம் மற்றும் எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்து 10 நிமிடங்கள் நன்கு கலக்கவும். 3 மணி நேரம் கழித்து மெல்லிய துணியில் வடிகட்டி, பின்னர் பருக வேண்டும். இப்படி செய்து வந்தால், பற்கள் மஞ்சள் நிறத்திலிருந்து மாறி, பளீரிட ஆரம்பிக்கும்.

Friday, June 12, 2009

க‌ண்‌ணி‌ன் இமைக‌ள்

நாம் கண்ணிமைக்கும் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டதாக கணக்கிடுகிறார்களா‌ம் ஆ‌ய்வாள‌ர்க‌ள்.


மேலு‌ம், ந‌ம் க‌ண்களு‌க்கு ஈர‌ப்பசையை அ‌ளி‌ப்பதே இ‌ந்த இமைக‌ள்தா‌ன். அதனா‌ல் தா‌ன் தொலைக்காட்சி ம‌ற்று‌ம் க‌ணி‌னியை‌ப் பா‌ர்‌க்கு‌ம் போது நமது இமைக‌ள் இமை‌ப்பது குறை‌ந்து ‌விடு‌கிறது. இதனா‌ல் க‌ண்களு‌க்கு‌த் தேவையான ஈர‌ப்பசை குறை‌ந்து பா‌ர்வை‌க்கு கோளாறு ஏ‌ற்படு‌கிறது. ஒரு ‌நி‌மிட‌த்‌தி‌ற்கு குறை‌ந்தது 20 முறையாவது இமைக‌ள் இமை‌க்க வே‌ண்டுமா‌ம்.


க‌ண்ணு‌க்கு மேலாக மறைவாக லாக்ரிமல் கிளாண்ட் என்று ஒரு சுரப்பி உ‌ள்ளது. இந்த சுரப்பி சுரக்கும் லாக்ரிமா என்ற திரவம்தான் கண்ணீர்.


பொதுவாக விழிக்கோளத்தில் தூசு படும்போது அதை அலம்பி விடுவதுதான் இந்த சுரப்பியின் வேலை. இது தொடர்ந்து இயங்கும்போது நம் கண்ணில் கண்ணீர் வடிகிறது.

Tuesday, June 9, 2009

பழகு தமிழ் - 1

1) பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.

2) சரக்கு ரயிலை குறுக்கு வழியில் பிடிக்க நினைத்த கிறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை.

3) யார் தச்ச சட்ட, என் தாத்தா தச்ச சட்ட.

4) கொக்கு நெட்ட கொக்கு,
நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.

5) ஓடற நரியில ஒரு நரி கிழ நரி,
கிழநரி முதுகுல ஒரு பிடி நர முடி.

6) பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?

7) வாழை பழம் வழுக்கி கிழவி ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்?

8) கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால்,
குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன.

9) கிழட்டு கிழவன் வியாழகிழமை வாழை பழத்தில் வழுக்கி விழுந்தான்.

10) கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது.

11) காக்கா காகான்னு கத்துறதால காகான்னு பேரு வந்ததா?
இல்ல காகான்னு பேரு வந்ததால காக்கா காகான்னு கத்துதா?

Sunday, June 7, 2009

கண் - இமை

கண்ணீரை துடைக்கும் கரங்கள் உறவுகள் என்றால்!
கண்ணீரே வராமல் காக்கும் இமைகள் தான் நண்பர்கள்!!!!

மௌனம் - மொழி

இன்பமான நேரங்களில் மௌனம் சம்மதம்!
உண்மையானவரை பிரியும் போது மௌனம் துன்பம்!
காதலில் மௌனம் சித்ரவதை!
தோல்வியில் மௌனம் சாதனை படி!
வெற்றியில் மௌனம் அடக்கம்!
இறுதியில் மௌனம் மரணம்!

அர்த்தம்

அன்பை சொல்ல ஆயிரம் வார்த்தைகள் உண்டு...

ஆனால் ஒரு சின்ன சிரிப்பு சொல்லும் அர்த்தம் எந்த வார்த்தையிலும் கிடையாது...

சுவாசம்

உலகமே உயிர் இல்லாத காற்றை தான் சுவாசிக்கிறது....
ஆனால் நான் உயிர் உள்ள உன் அன்பை சுவாசிக்கிறேன்!!!!!!!

தெரியாது

விடியும் வரை தெரியாது கண்டது கனவு என்று...

வாழ்கையும் அப்படி தான்...

முடியும் வரை தெரியாது வாழ்கை எவ்வளவு அற்புதமானது என்று...:)

தேடல்

நீ தேடும் ஒருவர் உன் தேடலில் கிடைப்பது இல்லை...

உன்னை தேடும் ஒருவரை நீ திரும்பி கூட பார்ப்பது இல்லை...

உன் நினைவில்

அசையாமல் காற்று...

அலை இல்லாமல் கடல்...

ஓடாமல் நதி...

பூக்காமல் மலர்...

இருக்கும் என்றால்....

நானும் இருப்பேன்

உன்னை நினைக்காமல்...

உரிமை

உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது...

என் மரணத்திற்கு முன்பே என்னை புதைபதற்கு...

உன் இதயத்திற்குள்...

Saturday, June 6, 2009

மனநோய்

மனநோய்க்கு அடிப்படை என்ன?
மனோதத்துவம் (Psychology) என்றால் என்ன என்பதை அடிப்படையில் புரிந்து கொள்தல் அவசியம். உதாரணமாக ஒரு சிலர் தினமும் இரவு நேரத்தில் மது
மது அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு நாள் மது அருந்த தவறும் பட்சத்தில் அவருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறத. தொடர்ந்து குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு காலப்போக்கில் கைநடுக்கம் போன்ற நரம்பு தளர்ச்சி பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகிறது. இதுவே சிலருக்கு மனநோய்க்கும் அடிப்படையாக அமைகிறது.

பொதுவாக அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளும், மனஅழுத்தமும் ஒன்றுக்கொன்று எவ்விதம் தொடர்புடையதோ, அதேபோல மனநோயும், தூக்கமின்மையும் நெருங்கிய கூட்டாளிகள் எனலாம்.தூக்கமின்மை காரணமாக உடல் சூடு உட்பட பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்பட்டாலும் கூட, அதிக நாட்கள் அல்லது ஒரு நாளில் அதிக நேரம் தூக்கமின்றி இருந்தால் அது மனநோய்க்கு வித்திடும் என்பது உறுதி.பொதுவாக மனித உடலுக்கு தினமும் 8 மணி நேர தூக்கம் அவசியமாகிறது. அது அதிகரித்தாலோ அல்லது போதிய அளவு தூக்கமின்மையாலோ மூளை சோர்வு ஏற்படுகிறது. அதனால்தான் தூக்கமின்மைக்கும், மனோவியாதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதென உளவியல் கூறுகிறது.பொதுவாக மனநோய் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகினால், முதலில் அவர்களுக்கு அளிக்கப்படுவது நிம்மதியான உறக்கத்தை கொடுக்கக்கூடிய மாத்திரை, மருந்துகளே.மனநோய் துவக்க நிலையில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் நன்றாக - போதிய அளவு தூங்கினாலே அவர்களுக்கு 90 சதவீத குணம் ஏற்பட்டு விடும்.மனநோய் என்பது பல்வேறு நிலைகளில், அதன் தீவிரத்தைப் பொருத்து வேறுபடுகிறது.

எந்தெந்த மாதிரியான தருணத்தில் மனநோயாளிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள், அவர்களின் தன்மைக்கேற்ப தீர்வு அல்லது எந்த மாதிரியான மனோதத்துவ நிபுணர்களை அணுகலாம் என்பது பற்றியெல்லாம் இப்பகுதியில் தொடருவோம்.

மனநோய் ஏன் உண்டாகிறது?
-டாக்டர் வேதமாலிகா M.D., M.S. (Psycho)., M.H.D.Sc., (cli.psy), Ph.D., D.Sc.,(pa.psy) Hypno (U.S.A.)
அன்பின்மையே (அ) அந்த அன்பை வெளிக்காட்ட தெரியாமையே பெரும்பாலும் பல மனப்பிரச்சினைகளுக்கு காரணமாகி விடுகிறது. பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத குழந்தை பாதிக்கப்படுகிறது. அதேப்போல, பெற்றோரின் அரவணைப்பு அதிகமாக கிடைக்கும் குழந்தையும் பாதிக்கப்படுகிறது! எப்படி என்கிறீர்களா?

இதோ....சினேகாவுக்கு வயது ஒன்பது. எந்த காரியத்தையும் தானாக செய்து கொள்ளத் தெரியாது. செய்தாலும் சரியாக வராது. பல்விளக்க அம்மா வேண்டும். குளிப்பாட்டிவிட அக்கா வேண்டும். ஸ்கூல் புத்தகங்கள் அடுக்கி பையில் போட்டு தர யாராவது வேண்டும். அவளாக எதையாவது செய்தால் பயம் வந்துவிடும். சின்ன சின்ன கேள்விகளுக்குக் கூட யாரையாவது கூப்பிடுவாள். பக்கத்து வீட்டு லஷ்மியை பார்க்கையில் சினேகாவுக்கு வியப்பாக இருக்கும். லஷ்மியும், சினேகாவும் ஒரே வகுப்பு, ஒரே வயது. காலையில் லஷ்மி எழுந்து அழகாக வாசல் தெளித்து புள்ளி வைத்து கோலம் போடுவாள். ரங்கோலி போட்டால் இன்றைக்கெல்லாம் பார்க்கலாம். குழந்தை என்ன அழகாக கோலம் போட்டிருக்கிறாள் என்று வியந்து போவார்கள். லஷ்மி தானே எழுந்து குளித்து விட்டு, தோட்டத்தில் பூ பறித்து தொடுத்து சாமிக்கு போட்டுவிட்டு அம்மாவுக்கு காபி கலந்து கொடுப்பாள். புத்தகங்களை அடுக்கி எடுத்துக் கொண்டு தம்பிக்கு முத்தம் கொடுத்து அவனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, ஸ்கூல் பஸ்ஸில் ஏறும் லஷ்மியை பார்க்கையில்... சினேகாவுக்கு வியப்பாக ஏன் சற்று பொறாமையாகக் கூட இருக்கும்.லஷ்மி கலகலவென்று சினேகிதிகளிடம் பேசி சிரிப்பாள். சிநேகா உம்மென்று ஜன்னலை வெறித்தபடி தனியாக உட்கார்ந்திருப்பாள். படிப்பிலும் லஷ்மி படு சுட்டி. இத்தனைக்கும் ட்யூஷன் கூட கிடையாது.சிநேகா... இளவரசிபோல் வளர்க்கப்படுகிறாள். தவமிருந்து எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பெண் குழந்தை என்று அனைவரும் அவளை தலையில் தூக்கி வைத்துக் கொள்வார்கள். ஒரு சின்ன துரும்பைக் கூட அவள் எடுத்துப் போடவிட மாட்டார்கள். நேரத்துக்கு ஒரு டிரஸ், வேளைக்கு ஒரு விளையாட்டு பொம்மை, நாளுக்கு ஒரு நகை, பட்டு என்று வாழ்க்கை காஸ்ட்லியாக போனது. சினேகாவும் பெருமையின் உச்சத்தில்தான் இருந்தாள். ஆனால் பள்ளி செல்ல ஆரம்பித்த பின் பிறரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்த பின்... அவளுக்கு இந்த தைரியம் போயே போய்விட்டது.
தன்னால் மற்றவர்களைப்போல் ஏன் ஸ்மார்ட்டாக இருக்க முடியவில்லை? ஒரு சின்ன வேலையைக் கூட நம்மல் செய்ய முடியவில்லையே என்ற கவலையும் ஒரு வித தாழ்வு மனப்பான்மையும் வந்துவிட்டது.தொட்டதற்கெல்லாம் பயம் வந்து விடும் சினேகாவுக்கு. குழந்தை தனியே தோட்டத்திற்கு போகிறான் பார் என்று அதட்டியபடி ஓடி வரும் பாட்டி. காபி குடித்த டம்ளரை கழுவப்போனால்.. ஐயோ நீ வேலையெல்லாம் செய்யக் கூடாது கண்ணு. சின்னக் கை சிவந்து கன்னிப் போய்விடும் என்று திடுக்கிடும் அம்மா. ஓடிப் பிடித்து விளையாடும்போது கூட குழந்தைக்கு என்ன ஆகிவிடுமோ என்று கண்காணிக்கும் அத்தை.இந்த அதிகக் கண்காணிப்பு சினேகாவுக்கு மூச்சு முட்டியது. சுதந்திரமாக எதையும் செய்ய முடியவில்லை. அவளுக்கே அவள் மேல் நம்பிக்கை வரவில்லை. இந்தக் கவலையின் விளைவு, கல்வியை பாதித்தது. அவளுக்கு பாடத்தில மனசு பதியவில்லை. மற்றவர்களெல்லாம் சிறகடித்து சிட்டுக் குருவியாக பறந்து திரியும்போது, தான் மட்டும் தங்கக் கூண்டில் அடைபட்ட கிளியாக, சிறகடிக்கப் பயப்படும் சின்னப் பறவையாக, பயமே வாழ்க்கையாக ஆகிவிட்டதே என்று தவித்தாள். அவள் பிடிவாத குணம் பள்ளியில் யாருக்கும் பிடிக்கவில்லை. எதிலும் தனக்குத்தான் முதலிடம் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பாள். கிடைக்காத போது கண்மண் தெரியாமல் கோபம் வந்து அடித்து விடுவாள். உங்கள் பெண்ணின் நடத்தை சரியில்லை என்று அடிக்கடி வீட்டிற்கு ரிப்போர்ட் வரும். படிப்பும் நாளுக்கு நாள் தேய்ந்து கடைசியில் அவள் பெயில் ஆகிவிட்டாள்.ஏன் இப்படி நடந்தது என்று சினேகா என்ன மண்டுவா!

அறிவில்லையா, திறமையில்லையா, அழகில்லையா, எதில் குறை? வைக்காத டியூஷனா, வாங்கித் தராத புத்தகமா? என்று கலைப்பட ஆரம்பித்தாள் சினேகாவின் அம்மா.அதிக கண்டிப்பால் பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தாள் பத்மா. அளவுக்கு மீறிய செல்லம் தந்து குட்டிச்சுவராக்கினாள் சினேகாவின் தாய் தேவி!குழந்தையும் ஒரு பூச்செடிதான். தன்னம்பிக்கை, தைரியம் என்கிற கதிரொளி பட்டால்தான் அதன்திறமைகள் வளரும். இந்த பிடிவாத குணம் சினேகாவுக்கு வர அவள் பெற்றோரே காரணம். வாழ்க்கை எப்போதுமே ரோஜா படுக்கையாக இருக்காது.அந்த பாதையில் கல்லும் இருக்கும். முள்ளும் இருக்கும். அதில் நடக்க கால்களுக்கு வலுவூட்ட வேண்டும். அடுத்தவரை கைபிடித்துக் கொண்டு காமெல்லாம் நடக்க முடியுமா?அதாவது ஒரே குழந்தை இருக்கும் வீட்டில் இத்தகைய பிரச்சினைகள் சாதாரணமாகத் தோன்றுகின்றன.
பிள்ளைகளை வீட்டின் கஷ்ட நஷ்டங்கள், பொறுப்புகள் தெரிந்தவர்களாக வளர்ப்பதே ஒரு தாய் செய்ய வேண்டிய சரியான செயல்.அது அவள் கடமையும்கூட. இன்று நீங்கள் உங்கள் பெண்ணை கையில் ஏந்தி சீராட்டலாம். நாளை!அதை நினைத்துப் பார்த்தீர்களா? பெற்றோர்களே விழித்துக் கொள்ளுங்கள்.உங்கள் குழந்தை தனித்து நின்று செயல்பட வேண்டும். யாரும் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தைரியமாக தன் காலில் நின்று வாழ்வின் சவால்களை சந்திக்க வேண்டும். இல்லாவிடில்... அந்த சாவல்கள் திடீரென்று எதிர்படும்போது... உங்கள் குழந்தை மிரண்டுவிடும். தன்னம்பிக்கை இழந்து தவித்துவிடும். தேவையா?அறிவிற் சிறந்த சாதனைகளை படைக்கும் அமெரிக்க குழந்தைகளை பாருஙகள். 12 வயதிற்கு மேல் ஒவ்வொரு குழந்தையும் வீட்டை விட்டு வெளியே சென்று தானே வேலை செய்து தானே படித்துக் கொள்ளும். தன் வாழ்க்கையைத்தானே அமைத்துக் கொள்ளம் தைரியமும், தன்னம்பிக்கையும் அதற்கு மழலையிலேயே ஊட்டப்பட்டு விடுகிறது.அங்கே எத்தனையோ குறைகள் இருக்கின்றன என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. யார் இல்லை என்றது? அம்மாவின் அரவணைப்பு கிடைக்காமல் பொம்மைக் கரடியை அணைத்துக் கொண்டு தூங்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அதேநேரம் அன்புடன் அதே நேரம் பிறரை சார்ந்திருக்காமல் வளர்க்கப்படும் அருமைக் குழந்தைகளும் இருக்கிறார்கள். எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.நமக்கு ஊன்றுகோல் ஏந்தும்குழந்தைகள் வேண்டாம்உள்ள உறுதியுடன் தானேசெயல்படும் குழந்தையே தேவைஇதை மனதில் கொண்டு அன்புடன், அளவான பராமரிப்புடன் நல் வழிகாட்டி குழந்தைகள் தன் திறமைகளை தானே வளர்த்துக் கொண்டு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர நல் வழிகாட்டுங்கள். உள்ளத்தில் உறுதியை ஊட்டுங்கள். சரியா?

மனநோயின் அறிகுறிகள்
மனநோய் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள், எந்தெந்த மாதிரியான தருணங்களில் மனநோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.மனநோய்க்கும், தூக்கமின்மைக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். சிந்தனைத் திறன் பாதிக்கப்படும்போதே மனநோய் ஏற்படுகிறது.நமது சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்துவது உடலின் தலைமைச் செயலகமான மூளையில் உள்ள நரம்பு மண்டலமே. ஒருவரின் சிந்தனைத் திறன் என்பது வயதிற்கேற்ப, காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது.குழந்தைப் பருவத்தில் உள்ளவர்கள், விளையாட்டு, பள்ளிப் படிப்பு, நண்பர்கள், புதிய பொருட்களை வாங்குதல், புத்தாடை, அணிகலன்கள், புத்தகங்களைப் படித்தல் என ஒவ்வொரு வயது நிலையிலும் அவர்களது சிந்தனை பரந்து விரிந்து கொண்டே செல்கிறது. ஆனால், பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது, சிலர் பித்துப் பிடித்ததைப் போல் ஆகிவிடுவர்.சிறு குழந்தைகளே கூட, சற்றே அதட்டலாகப் பேசினால், அவர்களின் முகபாவம் மாறிவிடுவதைப் பார்க்கிறோம். மிகவும் நம்பிக்கொண்டிருந்து விட்டு, குறிப்பிட்ட ஒரு பொருளோ அல்லது பதவியோ கிடைக்காமல் போனால்கூட சிலருக்கு ஒருவித மன அழுத்தம் உருவாகக்கூடும். நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர், அதாவது தாயோ - தந்தையோ மரணம் அடைந்தால் அவர்களின் இழப்பைத் தாங்க முடியாத துயரின் காரணமாகக்கூட சிலருக்கு மனநோய் ஏற்பட வாய்ப்புண்டு. ஆழ்ந்த பற்றுடன் வாழ்ந்துவிட்டு அவர்கள் மறைந்துவிடும் போதோ அல்லது அகால மரணம் ஏற்படும்போதோ இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படுகிறது.மனஅழுத்தமும், மனநோயும் தொடர்புடையது என்று ஏற்கனவே பார்த்தோம். நரம்புமண்டலத்தில் கட்டளைகளாக பதிவாகும் விஷயங்கள், நிறைவேறாமல் போகும்போதே பெரும்பாலானோருக்கு மனநோய் ஏற்படுகிறது.

இன்னும் சிலர், கஞ்சா, அபின், பிரெளன் சுகர் போன்ற போதைப்பொருட்களை உபயோகிப்பதால் அதிகளவில் மூளை நரம்புகள் தூண்டப்பட்டு பின்னர் அது மூளையின் சொல்படி நடக்காமல் போவதாலும் மனநோய்க்கு ஆளாகின்றனர்.அரிய நிகழ்வாக, அதிகளவு புத்தகப்புழுவாக இருப்பதால், சிந்தனை பாதிப்புக்குள்ளாகி மனஅழுத்த நோய்க்கு ஆளானவர்களையும் பார்க்கிறோம்.எனவே மனநோய் எந்தமாதிரி, எந்த சூழ்நிலையில் ஏற்படுகிறது என்பதை விடவும், அந்த நோய் ஏற்பட்டு விட்டால்,. அதனை குணப்படுத்துவது எப்படி என்பது பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டும்.முதலில் ஒருவருக்கு மனநோய் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது?அதிகநேரம் - அதாவது மணிக்கணக்கில் - நாள்கணக்கில் தனிமையில் இருப்பது, யாருடனும் பேசாமல் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருத்தல், சம்பந்தமின்றி தானாகப் பேசுதல் அல்லது புலம்புதல் போன்றவை இந்நோய்க்கான அடிப்படை அறிகுறிகள் எனலாம்.நோயின் தன்மையைப் பொருத்து அறிகுறிகளும் வேறுபடலாம். சிலர் அதிக நேரம் தண்ணீரை திறந்து விட்டு குளித்துக் கொண்டேயிருப்பர். வேறு சிலர் குளிக்கவே மாட்டார்கள். இதுபோல மனநோயாளிகளுக்கான அடையாளங்கள் பல உண்டு.முதலில் மனநோய் என்று தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட நோய்க்கு சிகிச்சையளிக்கக் கூடிய மனோதத்துவ நிபுணர்களை அணுக வேண்டும்.அவர்களின் அறிவுரைப்படி மாத்திரைகளை சாப்பிட வேண்டும். மனோதத்துவ நிபுணர்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கவுன்சலிங் எனப்படும் கலந்துரையாடல் மிக மிக முக்கியமானது. நோயாளியுடன் மருத்துவ நிபுணர் பேசுவதால், பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கேற்ப சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நோயின் தீவிரத்தை அறிந்து, சிகிச்சை அளிக்க முடியும்.

கருவில் ஏற்படும் மன பாதிப்பு என்றால்?
கருவில் ஏற்படும் மன பாதிப்பு என்றால் என்ன, அதற்கும் நம் மனநோய்க்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?நம்முடைய கஷ்ட காலங்களும், மனப்பிரச்சினைகளும் இந்த உலகத்தில் பிறந்து அடிபட்ட பின்னர்தானே ஏற்படுகிறது.குழந்தைப் பருவத்தில் ஏற்படும் முக்கியமான மனப் பாதிப்பே பல காலம் கழித்து ஒரு வகை மன நோயாக பரிணாமம் பெறுகிறது என்று சொல்லிவிட்டு இப்போது கருவில் ஏற்படும் மன பாதிப்பு என்கிறீர்களே இது என்ன விஷயம் என்று கேட்கிறீர்கள் இல்லையா?உண்மைதான். பிறந்த பின் ஏற்படும் மன பாதிப்பு ஒரு வகை, பிறப்பதற்கு முன் தாயிட்ன வயிற்றில் கருவாக இருக்கும்போதே ஏற்படும் மன பாதிப்பு மறுவகை!பயம், படபடப்பு, பாதுகாப்பின்மை இவை மூன்றும் பெரும்பாலும் மனநோய்கள் ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகின்றன. இத்தகைய பயங்கள் எந்த வயதிலும் தோன்றலாம். ஆனால் அவை உடனே வெளிவர வேண்டும் என்ற அவசியமில்லை. ஏதாவதொரு காலகட்டத்தில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் திடீரென வெளிப்படுகின்றன.ஆராயும்போதுதான் அந்த மன பாதிப்பு எந்த வயதில், எந்தக் காரணங்களால் ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது? எந்த சூழ்நிலையல் ஏற்பட்டது? என்று கண்டறிய முடிகிறது. இதைத்தான் சூழ்நிலை சிக்கல்களால் ஏற்படும் மன பாதிப்புகள் என்கிறோம். இந்த வகை மன பாதிப்புகள் எந்த வகை மருந்துகளுக்கும் கட்டப்படுவதேயில்லை.

கருவறையும் ஒரு கல்விக் கூடம்தான். அது குழந்தை பயிலும் முதல் பள்ளிக்கூடம்தான் எனலாம்.ஆமாம் தாயிடமிருந்து குழந்தை உணவை மட்டுமா பெறுகிறது? உணர்வுகளையும் சேர்த்தே அல்லவா பெறுகிறது. தாயின் எண்ண அலைகள் அப்படியே குழந்தையை சென்று அடைகின்றன. கல்வியறிவும் சிறந்த கலைத்திறன்களும் கொண்ட தாய், கருவுற்ற காலத்தில் அந்த கல்வியிலும் கலைகளிலும் மனம் ஒன்றி ஈடுபடும்போது, அவற்றில் மெய் மறந்து லயிக்கும்போது - அந்த கல்வியும் கலைகளும், அறிவும் அப்படியே கருவிலிருக்கும் குழந்தையை சென்று அடைகின்றன. கருவிலிருக்கும் குழந்தையை ஐந்தாவது மாதத்திலேயே கேட்கும் திறனையும், கிரகிக்கும் திறனையும் பெற்று விடுகிறது. தன்னைச் சுற்றி நடப்பவற்றை தாயின் மூலமாக அறிந்து கொள்கிறது. கருவறையில் அறியப்படும் கலைகள் கல்லறை வரை தொடருகின்றன.கல்வியை மட்டுமல்ல தாயின் கவரைகளையும், கண்ணீரையும் கூட குழந்தை கவனிக்கிறது.அது மனதின் மௌமான சோகம். அந்த சோகம் கருவை பாதிப்பது, கருவில் இருக்கும் குழந்தைக்கும் தெரியாது, தாய்க்கும் தெரியாது. இப்படி சோக ராகங்களை தினமும் குழந்தை கேட்க நேர்ந்தால்.. எனக்கு வாழ்வே, நிம்மதியே இல்லை, இதில் இந்த குழந்தை வேறு தேவையா" என்று தாய் மனமுடைந்து அழும்போது, அந்த சேயும் மனதளவில் பாதிக்கப்படுகிறது. ஒரு பாதுகாப்பின்மை, பய உணர்ச்சி அந்த குழந்தையின் ஆழ் மனதில் கருவறையிலேயே ஆழமாக அழுத்தமாக எழுதப்பட்டு விடுகிறது.பயமும் பாதுகாப்பின்மையும் தான் மனநோயின் அடித்தளம், இவ்வாறு கவலைகளுடன் கண்ணீருடன் தாய் போராடும்போது குழந்தை நாளொரு கவலையும் பொழுதொரு பயமுமாய் மெல்ல மெல்ல வளர்கிறது.அது இந்த உலகத்திற்கு வருமுன்பே மனதால் அடிபட்டு, பயத்துடனேயே மனபாதிப்புடனேயே பிறக்கிறது. இந்தப் பயங்களை காலமும் அழிப்பதில்லை. அப்படி அந்த குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது என்பது யாருக்கும் தெரிவதுமில்லை.எத்தனையோ வருடங்கள் கழித்து இந்த பயங்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனபாதிப்பாக வெளிப்படுகிறது.

கருவில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தையா என்று எப்படி கண்டுபிடிப்பது?
1. இப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாருடனும் ஒட்டாமல், கலகலப்பாக இல்லாமல் சோர்ந்து காணப்படுவார்கள்.
2. ஏதோ ஓர் இனம் தெரியாத பயம், எப்போதும் இவர்களிடம் காணப்படும்.
3. சிறு வயதிலேயே தாழ் மனப்பான்மை, மனச்சோர்வு இவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள். ஆனால் வெளியே தெரியாது.
4. சில குழந்தைகள் காரணமின்றி கோபப்படுதல், அளவுக்கு மீறிய வெறிச் செயல்களில் ஈடுபடுதல், வக்ரமான எண்ணங்கள் இவற்றால் பாதிக்கப்பட்ட வாய்ப்புகள் உண்டு. இளம் குற்றவாளிகளாக சீர்திருத்தப் பள்ளிகளில் இருக்கும் குழந்தைகளில் பலர் இப்படி கருநிலையில் மனம் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது ஆய்வுகளில் தெரிய வருகிறது.
5. இத்தகைய குழந்தைகளை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். ஒரு நேரம் இருக்கும் புத்தி, நடத்தை மறுநேரம் இருக்காது.
6. சிலர் படிப்பில் சிறந்து விளங்கினாலும் ஏதாவதொரு நடத்தை ஒவ்வொரு விதமாக மாறுபட்டு ஒரு வித்தியாசமான குழந்தையாக காணப்படும். ஆனால் இதை நாம் கவனிப்பதில்லை.
7. சுருக்கமாகச் சொன்னால் இப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நடத்தை ஒவ்வொரு விதமாக மாறுபட்டு ஒரு வித்தியாசமான குழந்தையாக காணப்படும்.

ஆனால், இதை நாம் கவனிப்பதில்லை.இது குறித்து ஆய்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுபற்றிய ஆய்வு இதுவரை நடைபெறவில்லை.

ஹிப்னோதெரபி முறையில் கருநிலை மனபாதிப்பை ஆராய்தல்
உள் மனம்தான், அந்த உள் மனதில் விதைக்கப்படும் எண்ணங்கள் தான் ஆழமாக அழுத்தமாக பதிந்து ஒருவரை மனநோயாளியாகவோ, செம்மையான மனம் கொண்டவராகவோ மாற்றுகிறது. உள்ளம் என்பது சரியாக இருந்தால் உலகம் முழுவதும் இனிக்கிறது.இந்த உள்மனதை ஹிப்னோ முறையில் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கடந்த காலத்தை நோக்கி செல்லுதல் முறையில், வயதை படிப்படியாக குறைத்து அவருடைய கருநிலை பருவத்திற்கு கொண்டு சென்று, அப்போது ஏற்பட்ட அனுபவங்களை ஆராய முடியும்.

செல்விக்கு வயது 18. 3 வயது முதலே நெஞ்சு வலி. படபடப்பு, பயம் என்று ஒரே பிரச்சினை இது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கும் என்று மருத்துவர்களின் ஆலோசனைப்படி எல்லா டெஸ்ட்டுகளும் எடுத்து, எல்லாம் நார்மல் என்று வந்துவிட்டன. இதய வலிக்கு தரப்பட்ட மருந்துகள் தற்காலிகமாக அந்த வலியை நிறுத்தவே தவிர நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. செல்வியால் கடுமையாக எதையும் செய்ய முடியாது. தொடர்ந்து ஒரு 4 மணி நேரம் படிக்க முடியாது. ஞாபக மறதியும் வந்து வாட்டும். படித்தால் கண் நரம்புகள் இழுப்பது போல் இருக்கும். தலைபாரமாகிவிடும். ஆனால் உடலளவில் செல்விக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது உறுதியாக தெரிந்தது. இது மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கும் என்ற மருத்துவர்களின் ஆலோசனைப்படி மனநல சிகிச்சைக்காக செல்வி இங்கே வந்தபோது மிகவும் டென்ஷனாக குழப்பத்துடன் இருந்தாள்.மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனை எப்படி உடல் நோயாக மாறும் என்று கேட்கத் தோன்றுகிறது இல்லையா? ஆமாம், மனம் பாதிக்கப்படும்போது உடலும் பாதிக்கப்படுகிறது. இதை "உளம் சார்ந்த உடல் நோய்கள்" (Pshcho Somatic Discorders) என்கிறோம். அதாவது மனவேதனை காரணமாக ஏற்படும் உடல் நோய்கள். "வியாதி உடலிலே - அதற்கான ஆணி வேர் மனதிலே" என்பது போல செல்விக்கு மனப் பிரச்சனையும், உடல் பிரச்சனையும் சேர்ந்தே இருந்தது, வாட்டியது. கருநிலை பருவத்தில் ஹிப்னோ ஆய்வில் செல்வி சொன்னது என்ன?செல்வியின் வயது "ஹிப்னோ ரிக்ரஷன்" முறையில் படிப்படியாக குறைக்கப்பட்டு 1 வயது வரை ஆராய்ந்தும், எந்த தடயமும் கிடைக்காததால் கருநிலை பருவத்திற்கு செல்வி அழைத்துச் செல்லப்பட்டாள். அவள் அப்போது சொன்னது. . ."கருவறை எனக்கு சிறை போல இருட்டாக இருந்தது. தினமும் நான் கேட்டதெல்லாம் அப்பாவின் ஏச்சுக்கள், அம்மாவின் அழுகை, துயரம் தாங்காமல் அம்மா அழுது அழுது அவளுக்கு நெஞ்சுவலியே வந்து விடும்".எப்போது அப்பா வீட்டிற்கு வருவாரோ, என்ன செய்வாரோ என்ற திகில் அம்மாவிடம் எப்போதும் இருந்தது. "நம் குடும்பம் இருக்கும் லட்சணத்தில் இந்த குழந்தை தேவை தானா? இதை அழித்துவிடு என்று பலமுறை சொல்லியும் நீ கேட்கவில்லை என்று வெறித்தனமாக அம்மாவின் கழுத்தை நெறிக்க வந்தார். அம்மா வீறிட்டு அலறி, நெஞ்சுவலி வந்து கீழே விழுந்துவிட்டாள். அம்மாவை யாரும் கவனிக்கவில்லை. பயமும் திகிலும் அம்மாவை ஆட்டிப் படைத்தன. இந்த உணர்வுகள் எல்லாம் என்னை மிகவும் பாதித்தன. அம்மாவின் வலியும், வேதனையும் என்னைத் தாக்கின. எனக்கு இந்த உலகத்தில் பிறக்கவே பிடிக்கவில்லை.""எப்போதும் இதே நினைவு என்னை வந்து இப்போதும் வாட்டுகிறது. இந்த துயர நினைவுகள் வரும்போது தலைபாரமும், நெஞ்சுவலியும், பயமும் ஏற்படுகின்றன. யாரைப் பார்த்தாலும் பயம், எங்கே சென்றாலும் பயம், அந்த பயம் அதிகமாகும் போது நெஞ்சுலி என்று பயமே வாழ்க்கையாகிவிட்டது. வாழ்க்கையில் பயங்கள் ஏற்படலாம். ஆனால் பயமே வாழ்க்கையாகிவிடக் கூடாது. எனக்குப் படிப்பு, திருமணம் எதுவும் வேண்டாம். என் அம்மாவைப் போல நானும் கஷ்டப்பட விரும்பவில்லை. . " என்று சொல்லி அழுத செல்வியை அமைதிப்படுத்தி தக்க சிகிச்சை தந்தபின் படிப்படியாக செல்வி குணமடைந்தாள். இப்படிப்பட்ட பிரச்சனைகள் விரைவில் தீர்வதில்லை. மிகவும் கடுமையான முயற்சியுடன் தான் குணப்படுத்த முடியும் என்பதே உண்மை. பொறுமையும், திறமையும் இருந்தால் வெற்றி நிச்சயம். இத்தகைய "கருநிலை பருவத்தை ஹிப்னோ முறையில் ஆராய்ந்து குணப்படுத்துதல்" பற்றிய தகவல்கள் இந்தியாவில் அதிகமாக வெளியிடப்படவில்லை. ஆனால் மனோசக்தி இதழின் ஆசிரியர் திரு. விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்கள் தன்னுடைய "முற்பிறவி மறுபிறவி அதிசயங்கள்" என்ற புத்தகத்தில் 23 வருடங்களுக்கு முன்பாகவே இதைப்பற்றி ஆராய்ந்து அழகாக விளக்கமாக எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கருவில் ஏற்படும் மன பாதிப்பைக் கூட குணப்படுத்தும் அரிய முறை ஹிப்னோதெரபி என்றால் மிகையாகாது.

லதாவுக்கு வயது நான்கு. எதற்குமே அழமாட்டாள். பசித்தாலும் அழவே மாட்டாள். பூச்சி கடித்தாலும் அழமாட்டாள். பார்வையில் ஒரு குழந்தைக்கே உரிய சுட்டித்தனம் இருக்காது. எந்த நேரமும் கண்ணை மூடிக்கொண்டு தனியாக உட்கார்ந்திருப்பாள். ஒரு வேளை இது மன வளர்ச்சியற்ற குழந்தையோ (Mentally Retarded Child) என்று எண்ணி சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். உளவியல் ஹிப்னாடிச முறையில் ஆராய்ந்தபோது உண்மை தெரிந்தது. லதாவுக்கு பிரச்சனை அவள் ஒன்பது மாதக் கருவாக தாயின் வயிற்றில் இருந்தபோதே ஆரம்பித்துவிட்டது. லதாவின் தாய் உஷாவுக்கு பயந்த மனசு, கணவன் குடித்துவிட்டு வந்து என்ன செய்வானோ என்ற தினசரி திகிலும், பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குக் கூட அனுப்பாத அவன் குணமும் பீதியைத் தந்தன. இதை யாரிடம் சொல்லி அழுவது என்று அவள் தனக்குத்தானே சிந்தித்து மாய்ந்து போவாள். இந்த தாயின் பயமும், திகிலும் அவள் உடலைப் பாதித்தன. உடலில் உண்டான கருவையும் பாதித்தன. தாயின் மன இயல்புகளை குழந்தை அப்படியே பிரதிபலித்தது. அதனால்தான் கருவுற்றிருக்கும் நேரம் ஒரு தாய் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். இங்கு லதாவும், அவள் அன்னையைப் போல உணர்ச்சிகளை உட்புதைத்து மன அழுத்தமும், மன இறுக்கமும் உள்ள குழந்தையாக பிறந்தவள். தாயின் மன பாரம் இங்கு குழந்தையை பாதித்தது. தக்க ஹிப்னாடிச சிகிச்சைக்குப் பின் பாதிப்பும் நீங்கியது.

5 வயது குமாருக்கு எப்போதும் ஒரு வெறி. எதையாவது உடைப்பது, யாரையாவது அடிப்பது என்பது பழகிப்போன விஷயம். பக்கத்து வீட்டு பையனை இருப்புக் கம்பியால் அடித்து மண்டையை உடைத்தபோதுதான், இது சாதாரண பிரச்சனை அல்ல என்று குமார் மனோதத்துவ சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டான். இவனை ஒரு வயது வரை "ரிக்ரஷன்" (Regression) முறையில் கடந்த காலத்திற்கு கொண்டு போயும் எந்தத் தடயமும் கிடைக்காததால், அதற்கு முந்தைய கருவறை பருவத்திற்கு (Womb Stage) கொண்டுபோய் ஆராய்ந்தபோது குமார் சொல்லத் துவங்கினான். "அப்பா, அம்மாவை அடிக்காத நாளே கிடையாது. கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பார். பாட்டியும், அம்மாவுக்கு சூடு வைப்பாள். தலை முடியை பிடித்து இழுத்து அடிப்பாள். அம்மா அழுதுகொண்டே இருப்பாள்." தன் ஆத்திரத்தையெல்லாம் கோபமாகக்கூட காட்ட முடியவில்லையே என்று குமாரின் அம்மா ஆத்திரங்களை உட்புதைத்தாள். உட்புதைக்கும் உணர்வுகளும் அப்படியே வயிற்றில் கருவாக இருக்கும் குமாரை சென்றடைகின்றன. ஒவ்வொரு நரம்பிலும் ஆத்திரத்தையும், வெறியையும் அவன் பிரதிபலிக்கிறான் என்பது தெரிந்தது. தக்க உளவியல் சிகிச்சை அளித்தபின் குமார் சாதுவாக மாறிவிட்டான்.

கருவிலேயே பிரச்சனை தொடங்கிவிடுகிறதா என்று அதிசயப்படுகிறீர்களா? வேண்டாம். அதைவிட அதிசயம் உங்களுக்கு காத்திருக்கிறது. அதுதான் முற்பிறவி, பாதிப்பு, கருவாக நீங்கள் இந்த உலகத்திற்கு வருமுன் கடந்த பிறவியில் ஏற்பட்ட பாதிப்பு. நம்ப முடியவில்லையே என்கிறீர்களா?அமெரிக்க உளவியல் மருத்துவ பல்கலைக்கழகம் பல வருடங்கள் ஆராய்ந்து முற்பிறவி அச்சங்கள் (Past Life Phobias) என்று ஒன்று இருக்கிறது; அது இன்றைய நல்வாழ்வை பாதிக்கிறது. அந்த பாதிப்பால்தான் நம் புத்தகத்தில் இல்லாத புதுவகை மனநோய்களுக்கு ஆளாகிறோம் என்று கண்டுபிடித்து, நிரூபித்தும் உள்ளது. கருவில் திருவுடையவர் என்று சொல்லும் வார்த்தை எத்தனை உண்மையானது! அன்று நம் முன்னோர்கள் கர்ப்பிணியாக இருக்கும் பெண் அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள். பயம், சஞ்சலம் எதுவுமின்றி நிம்மதியுடன் அவள் இருந்தால்தான் பிறக்கும் குழந்தை நல்ல குணம் இயல்புகளைக் கொண்டிருக்கும் என்று நம்பினார்கள்.

விஞ்ஞானமா - மெய்ஞானமா?
நம் இதிகாசங்களும், புராணங்களும் இதே கருத்தைத்தான் சித்தரிக்கின்றன. மகாபாரதத்தில் பத்மவியூகம் அமைப்பதைப் பற்றி கண்ணன் பேச, கருவிலிருக்கும் அபிமன்யூ அதைக் கற்றான் என்கிறார் வியாசர். அதேபோல் ஹிரண்யனின் மனைவி லீலாவதி பிரகலாதனை கருவில் சுமந்திருந்த நேரம் நாரதர் கூறிய நல்ல ஆன்முக கருத்துக்களை அந்த கருவிலிருக்கும் குழந்தை "ம்" கொட்டி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறது. தாயோ தூக்கத்திலிருக்கிறாள். பிற்காலத்தில் அரக்கனக்குப் பிறந்த அந்த குழந்தை சிறந்த அறிவும், ஆன்மீக திறனும் கொண்டு விளங்குகிறது. இப்படி கருவிலிருக்கும் போதே கல்வியை கலைகளை பயின்றதை பல மெய்ஞானக் கதைகள் கூறுகின்றன. இவை கற்பனை, சாத்தியமில்லாத ஒன்று என்று அதைப் பலர் ஒதுக்கித் தள்ளினர். இன்று விஞ்ஞானம் அந்தக் கருத்துக்கள் உண்மை என்று நிரூபித்துள்ளது. கருவிலிருக்கும் குழந்தை நல்ல இசையைக் கேட்கும்போது அதன் அறிவுத்திறனும், மற்ற திறமைகளும் மேம்பட்டு விளங்குவதாக ஆஸ்திரேலியா நாட்டில் நடந்த ஆராய்ச்சி முடிவுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கின்றன. கருவிலிருக்கும் குழந்தையின் செவிப்புலன் மிகவும் கூர்மையாக இருக்கிறது. அந்தக் குழந்தை இசையை மிகவும் விரும்புகிறது. அந்தக் குழந்தை இசையை மிகவும் விரும்புகிறது. சிட்னியிலிருள்ள ராயல் மருத்துவமனையில் கர்ப்பிணியான அறுபது பெண்களை வைத்து மருத்துவர்கள் ஓர் ஆய்வு நடத்தினர். இந்த தாய்மார்கள் தினமும் நல்ல இசை, பிரசங்கங்கள் முதலியவற்றை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகள் பிறந்த மூன்று வயதானதும் இந்த குழந்தைகளின் அறிவுத்திறன், இசை ஆர்வம், குண இயல்புகள் முதலிய பரிசோதனை செய்யப்பட்டன.இதேபோல நல் இசையை, பிரசங்கத்தை கேட்காத கர்ப்பிணி தாய்மார்களின் குழந்தைகளின் அறிவுத்திறனும் பரிசோதிக்கப்பட்டன. நல்ல இசையையும், பேச்சுக்களையும் கருவில் இருக்கும்போது கேட்ட குழந்தைகள் அறிவுத்திறனும், இசை ஆர்வத்திலும் குண இயல்புகளிலும் மிகவும் மேம்பட்டிருந்தனர். நல்லிசையை கேட்காத குழந்தைகள் மந்த புத்தி உடையவர்களாக, வன்மையான குணம் கொண்டவர்களாக அறிவுத்திறன் குறைந்தவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் நமக்கு தெரிவிக்கும் செய்தி என்ன? பிறக்கும் குழந்தை தைரியத்துடன், விவேகத்துடன் புத்திசாலியாக விளங்க வேண்டும் என்று விரும்பும் தாய்மார்கள் அமைதியான சூழ்நிலையில் எப்போதும் இருக்க வேண்டும். வீரம், விவேகம், அறிவுத்திறன் வளர்க்கும் புத்தகங்கள் உரக்க காதில் கேட்கும்படி படிக்க வேண்டும். இதைக் கேட்கும் குழந்தை பிற்காலத்தில் அப்படியே உருவாகிறது. கருவில் கற்கும் கல்வியும் கலைகளும் காலம் தோறும் தொடரும் காவியம்பிறவிகள்தோறும் பிரியாமல் தொடரும் அன்னை வரையும் அற்புத ஓவியம்.கல்வியும், கலைகளும் பயிலவேண்டிய காலம் மண்ணில் பிறந்த பிறகு அல்ல, அதற்கு முன்னரே ஆரம்பமாகிவிடுகிறது. இதனால்தான் அமைதியற்ற குடும்பங்களில் பிறக்கும் குழந்தை மனநோயாளியாகவோ, பயந்த சுபாவமுள்ளவராகவோ உலகில் ஜனிக்கிறது. இதைப்பற்றி விரிவாக "கருவில் ஏற்படும் மன பாதிப்பு" என்ற புத்தகத்தில் காண்போம். அதனால் கருவைச் சுமக்கும் பெண்கள் மகிழ்ச்சியுடன், மன அமைதியுடன் இருப்பது அவசியம். தாய்மார்களே! உங்கள் குழந்தையின் தலை எழுத்து குணநலன்கள் ஆகியவை கருவிலிருக்கும்போதே நிச்சயிக்கப்பட்டு விடுகின்றன. அவன் நல்லவனாக பிறப்பதும், தலைவனாக உருவாவதும் உங்கள் கையில், உங்கள் குடும்பத்தாரின் கையில்தான் இருக்கிறது. உங்களக்காக இல்லாவிட்டாலும், பிறக்கப் போகும் உங்கள் செல்வக் குழந்தைக்காக மன அமைதியுடன் இருக்க பழகிக்கொள்ளுங்கள். டென்ஷன் ஏற்படும் சூழ்நிலைகளை தவிருங்கள். நீங்கள் சாப்பிடும் உணவைவிட உணர்வுகளே - உங்கள் உணர்வுகளே மிகவும் முக்கியம்!உங்கள் குழந்தை உங்களிடமிருந்து உணவை மட்டும் பெறவில்லை. உங்கள் உணர்வுகளையும் சேர்த்தே பெறுகிறது; பிரதிபலிக்கிறது என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்!"எந்தக் குழந்தைகயும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!அவன் நல்லவனாவதும், தீயவனாவதும்அனனைக் கருவினிலே, அன்னை வளர்ப்பினிலே!"

மனநோய் வராமல் இருக்க என்ன செய்யலாம்?
மனம் இரண்டு வகைப்படும்: நிலையான மனம் மற்றும் நிலையில்லாத மனம். நம் முன்னோர்கள் மனதை மட்டும் ஆராயவில்லை. நிலையான மனதை எப்படி உருவாக்குவது என்றும் கண்டறிந்து, அதனை போதனைகளாக கூறியவை பின்வருமாறு:

நிலையான மனதை எப்படி உருவாக்குவது?
தினமும் காலையில் எழுந்து, காலை கடன்களை முடித்த பின்பு, ஒரு நாற்காலியில் வசதியாக அமர்ந்து, நம் மூச்சில் கவனம் செலுத்த வேண்டும். மூச்சை உள்ளே இழுக்கும் போது, நம் வயிறு வெளியே வர வேண்டும். மூச்சை வெளிவிடும் போது, நம் வயிறு உள்ளே செல்ல வேண்டும். இதுதான் சரியாக மூச்சு விடும் முறை. பதினைந்து நிமிடங்கள் இவ்வாறு செய்ய வேண்டும்.

பின்னர் வலது மூக்கை ஒரு கையால் மூடிக்கொண்டு இடது மூக்கினால் மூச்சுவிட வேண்டும். அதே போல் இடது மூக்கை மூடிக்கொண்டு வலது மூக்கினால் மூச்சுவிட வேண்டும்.

இது நல்ல வழியை காட்டும். மேலும் விவரங்களுக்கு யோகம் என்னும் தலைப்பில் பார்க்கவும்.

Thursday, June 4, 2009

உணவு ச‌ெ‌ரிமான‌ம்

செரிக்கும் பாதையானது நீண்ட குழாய் போன்றது. வாயிலிருந்து துவங்கி, கழுத்து வழியாக உடம்பின் இடுப்புப் பகுதி வரை இறங்குகிறது. இந்தப் பாதையை நீட்டி அளந்தால் சுமார் 30 அடி நீளம் இருக்கும். இதனை உணவுப் பாதை என்கிறோம். இதில் வாய், உணவுக்குழாய், வயிறு, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவை ஜீரண உறுப்புகள் எனப்படும்.

உணவு உ‌ண்டது‌ம், உணவு செ‌ரிமானப் ப‌ணி துவ‌ங்கு‌‌கிறது. உணவுகளை செரிக்கும் போது வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும், பெப்சினும் சுரக்கின்றன. இவை மிகவும் சக்தி வாய்ந்த அமிலங்களாகும். சா‌ப்‌பிடுவத‌ற்கு மு‌ன்பு‌ம், சா‌ப்பா‌ட்டு‌க்கு நடுவேயு‌ம் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதா‌ல் இ‌ந்த அ‌மில‌ங்க‌ள் சுர‌ப்ப‌தி‌ல் தாமத‌ம் ஏ‌ற்படு‌ம். அதனா‌ல்தா‌ன் சா‌ப்‌பிடுவத‌ற்கு மு‌ன்பு த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் அ‌றிவுறு‌த்துவா‌ர்க‌ள்.

பொதுவாக இரைப் பையைச் சூழ்ந்துள்ள சளிச்சவ்வு, இந்த சக்தி வாய்ந்த அமிலங்கள் இரைப்பைக்குக் கேடு விளைவிக்காத வண்ணம் பாதுகாக்கின்றன.

ஆனால் மசாலா அல்லது அதிகமான கார உணவு, புகையிலையை உண்ணும்போது இந்த அமிலங்கள் அதிகமாக சுரந்து, இரைப்பை சுவர்கள் மற்றும் திசுக்களை புண்ணாக்குகின்றன. ‌இதைத் தான் அல்சர் என்று அழைக்கிறோம்.

உள்ளே செல்லும் உணவுக்கூழை சிறுகுடலைச் சுற்றியுள்ள ரத்த நாளங்கள் உறிஞ்சிக் கொள்கின்றன.

Wednesday, June 3, 2009

உடல் வளர்ச்சி

நமது உடம்பில் பத்து மில்லியனுக்கும் மேலாக, உயிரணுக்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லும் வளர்ந்து பின்பு இரண்டாகும். பின்பு இவை நான்காகும். இப்படி செல்கள் பிரிந்து பிரிந்து வளர்வதால் ஒவ்வொரு நாளும் தசைகளிலும், எலும்புகளிலும் புதிய உயிரணுக்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. பழைய உயிரணுக்கள் மடிந்து நமது உடலுக்கு வளர்ச்சி ஏற்படுகிறது. இதற்கு காரணமான நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு மண்டலத்திற்கு துணை செய்து வளர்ச்சிக்கும், இனப்பெருக்கத்திற்கும் உதவுகிறது.

ரோமங்கள்

  • சராசரியாக மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐந்து லட்சம்.
  • நமது உடம்பில் உ‌ள்ளங்கை, பாதங்களின் கீழ் பகுதி ம‌ற்று‌ம் உத‌ட்டி‌ல் மட்டுமே ரோமங்கம் வளராது.
  • அலுமினியக் கம்பிக்கு இணையாக நம்முடைய கூந்தல் உறுதியானது.

காது

நமது உடல் வளர்ச்சி என்பது 21 வயது வரை ‌நிக‌ழ்‌கிறது. அத‌ன்‌பிறகு‌ம் நம் உடலில் வளரும் உறுப்பு ஒ‌ன்று உ‌ள்ளது. அது நமது காது மட்டுமே. நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக காது வள‌ர்‌கிறது.அதன் வளர்ச்சி எப்படி என்றால், ஒருவேளை ஆயிரம் வருடங்காலம் நாம் உயிரோடு இருந்தால் வளரும் காதின் அளவு, ஒரு குட்டி யானையின் காது போன்றிருக்கும்.

Friday, May 29, 2009

வீட்டின் முன் கோலம் - ஏன்?

ஆதி காலத்தில் மனிதன் மரங்களிலும், குகைகளிலும் வாழ்ந்து வந்தான். பின்னர் காலம் செல்லச் செல்ல சிறு சிறு வீடுகளை கட்ட ஆரம்பித்தான். அவ்வாறு வீடு கட்டும் போது, கண்ணுக்கு தெரியாத பல நுண்ணுயிர்கள் மடிந்தன. உயிர்களை கொல்வது பாவச் செயலாகும். இது மனிதனை மிகவும் வதைத்தது. ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தான்.

வீடு கட்டி முடித்த பின்னர், அரிசி மாவை மணல் போல திரித்து அதில் வீட்டின் முன் கோலம் போட ஆரம்பித்தான். கோலத்தில் இருக்கும் அரிசியை சாப்பிட எறும்பு மற்றும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் வந்தன. இதனால் உயிர்களை கொன்ற பாவங்கள் தீர்ந்து விட்டது என்று நிம்மதியாக இருந்தான். கோலமும் வீட்டின் முன் மிகவும் அழகாக இருந்தது.

ஆனால் இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, அரிசி கோலம், ரசாயன கோலமானது பின்னர் ஜவ்வு காகிதத்தில் கோலம் அச்சு அடிக்கப்பட்டு வீட்டின் முன் ஒட்டப்பட்டது. இதனால் மேலும் பல நுண்ணுயிர்கள் மடிந்தன, மடிந்து கொண்டிருக்கின்றன. இதனோடு கோல போட்டிகள் வேறு உருவானது.

அழகுக்கு முக்கியத்துவமா இல்லை உயிர்களுக்கா? செய்யும் செயலை ஏன், எதற்காக என்று தெரிந்து செய்தால் நன்மை பயக்கும். இல்லையேல் கேலிக்கும் கூத்துக்கும் இடம் கொடுக்க வேண்டும். நம் முன்னோர்கள் கோலத்தை உருவாக்கிய காரணத்தையே நாம் இன்று மறந்துவிட்டோம். இவை நமக்கு நன்மை பயக்குமா? சிந்திப்போம்! செயல்படுவோம்!

Wednesday, May 27, 2009

தாலி, மெட்டி - ஏன்?

அக்காலத்தில் தான் திருமணம் ஆனவர், திருமணம் ஆகாதவர் என்று மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தனர். இப்போது அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் அடையாள அட்டை போன்று ஒன்று வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதன்படி தாலியும், மெட்டியும் உருவானது.

தலை நிமிர்ந்து நடப்பன் ஆடவன் என்பதால் தன் எதிரே வரும் பெண் திருமணம் ஆனவள் என்பது தெரிய வேண்டும் என்பதற்காக, பெண் தாலி அணிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்கள். தலை குனிந்து நிலம் பார்த்து நடப்பவள் பெண் என்பதால் தன் எதிரே வரும் திருமணம் ஆனவர் என்று தெரிந்து கொள்வதற்காக, ஆண் மெட்டி அணிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

அதனை நடை முறைக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் இன்று நாம் இந்த காரணத்தை புரிந்து கொண்டு தாலி, மெட்டியை அணிந்து கொள்கிறோமா?

ஆஹா, பண்டைய காலத்தில் அடையாள அட்டையை கண்டுபிடித்தது எம் மக்களே!

Saturday, May 23, 2009

இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன்?

மனிதன் உயிர் வாழ பிராண வாயு தேவை. அவ்வாறே மரங்களும், செடி, கொடிகளும் உயிர் வாழ பிராண வாயு தேவை.

மனிதன் எப்போதும் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறான். மரங்களோ இரு விதமாக மூச்சு விடுகிறது. பகலில் அசுத்த காற்றை உள் வாங்கி, பிராண வாயுவை வெளிவிடுகிறது. இரவில் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறது.

எனவே, இரவில் மனிதன் மரத்தின் கீழே படுத்தால், அவனுக்கு போதுமான அளவு பிராண வாயு கிடைக்காது. மூச்சு திணறல் ஏற்படும். இக்காரணத்தினாலேயே நம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில் படுக்க கூடாது என்று கூறினார்கள். இதனை ஒரு சிலர் மறுத்து பேசினர். அவர்களுடைய உடல் நாலத்திற்க்கும் கேடு வரக் கூடாது என்பதற்காக, இரவில் மரத்தடியில் படுத்தால் பேய் அமுக்கும் என்று பயமுறுத்தி வைத்தனர்.

என்றும் சான்றோர்கள் சான்றோர்களே!

வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது - ஏன்?

இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிய வேண்டும்.

காந்தம், இரும்பு (Iron) தன்மை கொண்ட பொருட்களையும், காந்த தன்மை கொண்ட பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம் தெரியும். காந்ததிற்கு இரண்டு துருவங்கள் (Poles) உண்டு - வட துருவம் (North Pole) மற்றும் தென் துருவம் (South Pole). இயல்பாக ஒரே துருவம் விலகி கொள்ளும் (Like Poles repel each other), எதிர் துருவம் ஒன்றை ஒன்று ஈர்க்கும் (Unlike poles attract each other). எனவே, நாம் ஆய்வு கூடத்தில் (Laboratory) ஆய்வு முடிந்த பின் எதிர் துருவங்களை ஒன்றாக வைப்போம். அப்போது தான் அதன் காந்த ஈர்ப்பு தன்மை அப்படியே இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால் அதன் காந்த ஈர்ப்பு தன்மை சிதைந்துவிடும். மேலும், இயல்பாக இருக்கும் காந்தம் (Natural Magnets) தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறு சிறு காந்த துண்டுகளாக மாற்றும் தன்மை கொண்டது.

பூமி எப்படி காந்தம் ஆனது?
சூரியனின் வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்கு பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால் உருவாக்கப்படுகிறது. எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும் வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும் (Positive Current), இடதுபுறம் இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் (Negative Current) பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது.

மனிதன் எப்படி காந்தப் பொருள் ஆனான்?
மனித உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பல ரசாயன பொருட்களை கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்பு சத்து உள்ளது. இந்த சிவப்பு அணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.

எப்படி தூங்க வேண்டும்?
பூமிக்கு நான்கு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடனும் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும். எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.

Thursday, May 21, 2009

உரிமை குரல்

இரண்டு நாட்களுக்கு முன் வேலூர் சென்றிருந்தேன். வீட்டில் இருந்து கத்திப்பாரை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்க்கு சென்றிருந்தால், கோயம்பேட்டில் இருந்து வரும் வேலூர் பேருந்து ஒன்றில் ஏறி வேலூர் சென்றிருக்கலாம். ஆனால் பதினைந்து பேர் செல்வதால் கோயம்பேடு சென்றால் அனைவரும் உட்கார்ந்து செல்லலாம் என்று எண்ணி கோயம்பேடு சென்றோம். பனிரண்டு பெரியவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள். நாங்கள் நினைத்தது போல் வேலூர் பேருந்து காலியாக நின்று கொண்டிருந்தது. அனைவரும் ஏறி அமர்ந்தோம்.

பேருந்தின் இடது புறம் இரண்டு இருக்கை வரிசையும், வலது பக்கத்தில் மூன்று இருக்கை வரிசையும் இருந்தது. பேருந்தில் ஆங்காங்கே சிறுவர்களுக்கு (மூன்று வயதிற்கு மேற்பட்டவர்கள்) அரை பயனச்சீட்டு வாங்க வேண்டும் என்று எழுதி இருந்தது. இது பேருந்தில் பயணிபவர்களுக்கான விதிமுறை. அவ்வாறு அரை பயணச்சீட்டு வாங்கப்படும் குழந்தைகளுக்கு, இருக்கை இருந்தால் உட்கார்வதற்கு முழு இருக்கை தர வேண்டும் என்பதும் பேருந்தில் பயணிபவர்களுக்கான விதிமுறையே.

இவ்வாறு இருக்க, பேருந்து நடத்துனர் அடுத்த அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஆட்களை ஏற்றும் போது பேருந்தில் இடம் இருப்பதாக கூறி, ஆட்களை ஏற்றி, என்னிடம் வந்து தள்ளி உட்கருமாறு கூறினார். நானும் இடம் கொடுக்க அருகில் அமர்ந்தவாறோ என்னை மேலும் மேலும் தள்ள குழந்தைகள் திணற ஆரம்பித்தனர். அருகில் அமர்ந்தவரிடம், திரும்பி உட்கருமாறு கூறினென். அப்படி உட்கார்ந்தால் அவரது கால் நடை பாதையில் இருக்கும். அவர் மறுத்து, குழந்தைகள் தானே என்று அதிகரமாக கூறினார். உடனே, பேருந்து நடத்துநரை அழைத்தேன்.

நடத்துனர் அருகில் வந்தார். இரண்டு அரை பயனச் சீட்டுக்கு ஒரு இருக்கை தான் தர முடியும் என்றும் நான் அருகில் அமர்ந்து இருப்பவருடன் ஒத்துபோக வேண்டும் என்றார். இரண்டு அரை பயணச்சீட்டு என்பது கணக்கு படி ஒரு பயனசீட்டின் விலை தான். ஆனால் பேருந்தின் விதி முறைப்படி இரண்டு இருக்கைகளுக்கு சமம். நான் மற்றவருடன் ஒத்துபோக மாட்டேன் என்று கூறவில்லை. ஒத்துபோக வேண்டும் என்பதற்காக நான் கஷ்டப்பட விரும்பவில்லை. மேலும் ஒத்துபோவது என்பது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். என் அருகில் அமர்பவர் ஒத்துபோகாத போது என்னால் மட்டும் எப்படி சாத்தியம்? அதுவும் மூன்று மணி நேரம் இரண்டு குழந்தைகளுடன். பேருந்து நடத்துனர் தனது கட்டுபாட்டில் உள்ள பேருந்தில் அதிக வருமானம் காட்ட வேண்டும் என்பதற்காக பேருந்தில் பயணிக்கும் பயணிகளை கஷ்டபடுத்துவதில் என்ன நியாயம்?

எனவே என் குடும்பத்தினர் அனைவரும் எப்படி அது சாத்தியம் என்று வினவ, பேருந்தில் ஒரே கூச்சல். நான் பேருந்தின் விதி முறைப்படி இரண்டு இருக்கை தான் தர வேண்டும் என்றும் என்னால் கஷ்டப்பட முடியாது என்றும் நான் கோயம்பேட்டில் இருந்து இருக்கைகாக சுற்றி வந்திருக்கிறேன் என்றும் கூறினேன். உடனே நடத்துனர் அமைதியனார். ஆனால் என் அருகில் அமர்ந்திருந்தவருடன் வந்திருந்தவர்கள் தாங்கள் பொது மக்கள் என்று கூற, என் குடும்பத்தினர் சிரித்துவிட்டனர். பேருந்து நடத்துனாரோ அந்த நபரை அழைத்து தனது இருக்கையில் அமர செய்தார். நான் என் குழந்தைகளுடன் நிம்மதியாக வேலூர் வந்து சேர்ந்தேன்.

பொது மக்களுக்கு ஏன் பொது அறிவு இல்லாமல் போனது? தினந்தோறும் பயணம் செய்யும் பேருந்தின் விதி முறைகள் ஏன் தெரியாமல் போயிற்று? அரசு என்ன சட்டம் கொண்டு வருகிறது என்று பொது மக்களுக்கு ஏன் தெரியவில்லை? இந்த விழிப்புனர்வை எவ்வாறு பொது மக்களுக்கு கொண்டு சேர்ப்பது. சட்டம், நம் நன்மைக்கு தான் என்று தெரியாமல் இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்க போகிறோம்? அன்பார்ந்த தமிழ் இனமே விழித்து கொள்! உனக்காக அரசு உருவாக்கி உள்ள நல்ல திட்டங்களை பயன்படுத்து!

என்றும் வாழ்க வளர்க நிம்மதியுடன்!

Tuesday, May 12, 2009

ஒரு இடத்திற்கு கிளம்பும்போது பூனை குருகிட்டால் சிறிது நேரம் உட்கார வேண்டும் - ஏன்?

அன்றைய சூழல்:-

சாலைகள் இல்லாத காலம். காட்டு வழியே நடந்து செல்ல வேண்டிய காலம். காடு, மிருகங்கள் வாழும் இடம் என நமக்கு தெரியும். சிங்கம் மற்றும் பூனை(Cat Family) வகையை சேர்ந்த புலி இவைகளுக்கு பசி எடுத்தால் என்ன செய்யும் என்று நமக்கு நன்கு தெரியும்.
இரண்டு விஷயங்கள் நடக்க கூடும்:-
ஒன்று, மிருகங்கள் நம்மை அடித்து சாப்பிட கூடும்.
இரண்டு, நாம் மிருகங்களை கொன்றுவிட நேரும்.
விளைவு:-
உயிர் சேதம் மட்டுமே! போய் சேர வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாது.
முடிவு:-
ஒரு இடத்திற்கு கிளம்பும்போது பூனை (Cat Family) குருகிட்டால், சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு அந்த பூனை சென்ற பின் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இன்றைய சூழல்:-
நம்மை சுற்றி எப்போதும் போக்குவரத்து நெரிசல் தான். நாமாக விரும்பி காட்டுக்குள் சென்று பூனை வகையான புலியை கட்டி உருண்டால் தான் உயிர் இழப்பு.
என்ன செய்யலாம்?
வீட்டு பூனையை கண்டு, அதை குறை கூறி வீட்டில் ஓய்வு எடுக்கலாமா? இல்லை நம் வேலையை பார்க்கலாமா?

சூரியன் மறைந்த பின் வீடு பெருக்க கூடாது - ஏன்?

அன்றைய சூழல்:-
மின்சாரம் கண்டுபிடிக்காத அக்காலத்தில், அகல் விலக்குகள் தான் வீடுதோறும் இருக்கும். மேலும் வீட்டை சுற்றிலும் மரம், செடி, கொடி என இயற்க்கை சூழ்ந்து இருக்கும்.

இரண்டு விஷயங்கள் நடக்க கூடும்:-
ஒன்று, சூரியன் மறைந்த பின்னர் பாம்பு போன்ற விஷத்தன்மை கொண்ட பூச்சிகள் இதமான வெப்பதிற்காக வீட்டினுள் தஞ்சம் அடையும்.
இரண்டு, நாம் கை தவறி ஏதேனும் விலை மதிப்பற்ற பொருளை கீழே போட்டுவிட கூடும்.

விளைவு:-
ஒன்று, நம்மை அறியாமல் தஞ்சம் புகுந்த பூச்சிகளை தொந்தரவு செய்து அதன் கோபத்திற்கு ஆளாக கூடும்.
இரண்டு, விலை மதிப்பற்ற பொருளை குப்பையில் போட்டுவிட கூடும்.

எது எப்படியோ பின் விளைவுகள் நமக்குத்தானே.

முடிவு:-
சூரியன் மறைந்த பின் வீடு பெருக்க வேண்டாம்.

இன்றைய சூழல்:-
நம்மை சுற்றி எப்போதும் வெளிச்சம் தான். நாமாக பார்த்து விளக்கை அணைத்தால் தான் இருட்டு. மேலும் இன்றைய கால கட்டத்தில் நம் வீட்டை சுற்றி அடுக்கு மாடி கட்டிடங்களும், நெடும் சாலைகளும் மட்டுமே உள்ளதால் இயற்க்கைக்கு வழியே இல்லை.

என்ன செய்யலாம்?

சூரியன் மறைந்த பின் வீடு பெருக்கலாமா வேண்டாமா?

மற்ற செயல்கள் - இதே காரணம்
அ) இரவில் நகம் வெட்டுவது
ஆ) தலை வாறுவது

Tuesday, May 5, 2009

நாணயம்

பெயர் காரணம்:

நாணயம் என்றால் "நேர்மை" என்று பொருள். கொடுப்பவரும் பெற்றுக்கொள்பவரும் நாணயத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக எனக்கு இந்த பெயர். இப்போது நான் உருவான வரலாறை பார்போமா?

உருவான காரணம்:

முதலில் பண்டமாற்று (Exchanging things) முறையில் தான் கொடுக்கல் வாங்கல் நடைபெறத் துவங்கியது. தன்னிடம் அதிகமுள்ளவற்றைக் கொடுத்து இல்லாதவற்றை (எதிர் தரப்பினரிடம் அதிகமாக இருப்பதை) பெறுதல்.

தேவைகள் அதிகமாக அதிகமாக பண்டமாற்று அவ்வளவாக ஒத்து வரவில்லை. நாம் கொடுக்கத் தயாராக இருக்கும் பொருள் எதிர்தரப்பினருக்கு தேவைப் படாவிட்டால்...? அவர்களுக்கு என்ன தேவை என்று பார்த்து, அது யாரிடம் உள்ளது என்று தேடி அவர்களிடம் நம் பொருளைக் கொடுத்து (ஒரு வேளை அவர்களுக்கும் அது வேண்டாம் என்றால்?!)...

இதெல்லாம் வேண்டாம், பேசாமல் ஒரு அளவுகோல் வைத்துக் கொள்வோம் (ஒரு சிறிய தங்கம் அல்லது வெள்ளியாலான வில்லை.). எல்லாப் பொருள்களுக்கும் அதன் மதிப்பை இந்த வில்லைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடுவோம். அரிசி - 5 வில்லை, மீன் - 2 வில்லை, உப்பு - 1 வில்லை, இது மாதிரி தேவைக்கும், உற்பத்திக்கும் தகுந்தவாறு விலை நிர்ணயம் செய்து கொள்வோம் என்று கூடிப் பேசியதன் விளைவு தான் பணம்.

இதனால் வியாபாரம் பெரிய அளவில் அதிகரித்தது. நம்மிடமுள்ள பொருளுக்கு யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அங்கு விற்று நமக்கு தேவையானதை யார் குறைந்த விலையில் தருகிறார்களோ அங்கு வாங்கலாம் என்ற வசதி உண்டாயிற்று (Business).

பணத்தின் வகைகள்:
முதலில் பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட உலோகத்தின் மதிப்பைக் கொண்டு மதிப்பிடத் தொடங்கினார்கள். தங்க நாணயம் என்றால் அதில் உள்ள தங்கத்தின் எடை தான் அந்த நாணயத்தின் மதிப்பு. இது கிட்டதட்ட பண்டமாற்று முறை தான். தங்கம், வெள்ளி, பித்தளை பின்னர் வெண்கலம், இரும்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட நாணயங்கள் உபயோகிக்கப்பட்டன. இவை Commodity Money எனப்படும்.

இதற்கடுத்த முறை Credit Money எனப்படுவது. தங்கத்தை நாணயமாக்கி உபயோகிப்பதற்கு பதிலாக அரசாங்கம் தங்கத்தை தன் இருப்பில் வைத்துக் கொண்டு அதன் மதிப்பிற்கு ஒரு தாளில் உத்தரவாதம் அளித்து (அதாவது இந்த தாளைக் கொண்டு வருபவர்களுக்கு இந்த மதிப்பிற்கு உரிய அளவு தங்கம் அளிக்கப்படும்.). இது கிட்டதட்ட ஒரு பத்திரம் மாதிரி தான் (Cheque / Document). பணம் நோட்டுக்களாக மாறத் தொடங்கியது.

தாளை வாங்கிக் கொண்டு உலோகத்தை தரும் உத்தரவாதம் (Acknowledgement) எதுவும் இல்லாமல் இந்த நோட்டின் மதிப்பு இது என்று அரசாங்கத்தின் ஆணையால் ஒரு நாட்டில் பணமாக உபயோகிக்கும் முறைக்கு பியட் என்று பெயர் (Fiat money). யு.எஸ்.ஏ. வின் பணம் இவ்வகையானது தான். (This note is legal tender என்று எழுதப்பட்டிருக்கும்). தற்போது உபயோகத்திலிருக்கும் நாணயங்களும் இந்த வகையைச் சேர்ந்தது தான். ஏனென்றால் இந்த நாணயங்களிலுள்ள உலோகத்தின் மதிப்பு அந்த நாணய மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.

ஆனால் ஒரு அரசாங்கம் இஷ்டத்திற்கு பணம் அச்சடித்து புழக்கத்தில் விட்டால் அதன் மதிப்பு குறைந்து விடும்.

எனக்கு மதங்கள் தெரியாது! இருப்பினும்.....
முன்பிருந்த இரண்டு ரூபாய் நாணயத்தில் தேசத்தின் படமும் அதன் முழுப்பரப்பிலும் விரிந்து பறக்கும் தேசியக்கொடியும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அசோகமுத்திரையான சிங்கங்களும் அதன் கீழே "சத்யமேவ ஜெயதே" என்ற விருதுவாக்கும் கம்பீரமாக இடம்பெற்றிருந்தன. இப்போது இந்திய அரசு வெளியிட்டுள்ள இரண்டு ரூபாய் நாணயத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் உள்ளன (படம் 1):








படம் 1: சிலுவைக்கே முதலிடம்- அசோகச்சின்னம் குறுக்கப்பட்டது

- தேசத்தின் படமும் தேசியக்கொடியும் அறவே நீக்கப்பட்டு விட்டன.

- அசோக முத்திரை உள்ள பக்கம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு அந்த மூன்றில் ஒரு பகுதியில் (நடுப்பகுதியில்) அளவில் சுருக்கப்பட்டு 2 என்ற எண்ணுடன் இடத்தை பகிர்ந்து கொண்டபடி அசோகச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

- அசோகச்சின்னமே அளவில் சிறிதாக்கப்பட்டு விட்டதால், அதன் கீழே உள்ள "சத்யமேவ ஜெயதே" என்ற வாக்கியம் லென்ஸ் வைத்துப்பார்க்க வேண்டிய அளவிற்கு மிகமிகச்சிறியதாகக் குறுக்கப்பட்டுள்ளது.

- ஆனால், நாணயத்தின் மறுபுறத்திலோ மிகத் தெளிவாகவும் பெரிதாகவும் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் சிலுவைச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது- அதுவும் "ஜெருசலேம் சிலுவை" என்றும் குருசடிச்சிலுவை என்று அறியப்படும் "crusader's cross"

இந்த சின்னத்தின் மூலாதாரம் 9-ஆம் நூற்றாண்டின் கிறித்துவ மன்னன் லூயியின் (Louis the Pious) நாணயத்தில் உள்ளது. (படம் 2: "லூயி மன்னனின் கிறித்துவ நாணயம்").

படம் 2: லூயி மன்னனின் கிறித்துவ நாணயம்

இதில் உள்ள பெசன்ட் எனப்படும் நாற்புள்ளிகளுக்கு- நான்கு திசைகளிலும் சென்று கிறித்துவின் நற்செய்தி பரப்பவேண்டிய அவசியத்தைச் சுட்டுவது; மற்றும் மத்தேயு, மார்க், லூக்கா, யோவான், என்ற நான்கு முக்கிய கிறித்துவ நற்செய்தி லிபியங்களைக் குறிப்பது - என்று இரண்டு வகை விளக்கங்கள் முக்கியமாகத் தரப்படுகின்றன. இந்த சின்னமே பின்னர் ஜெருசலேம் சிலுவையாக மாறி முஸ்லீம்களிடமிருந்து ஜெருசலேத்தை மீட்க போப் இரண்டாம் அர்பன் தொடுத்த முதல் சிலுவைப்போரில் கிறித்துவப் படையின் ஆயுதச்சின்னமாக விளங்கியது. முதல் சிலுவைப்போரில் முஸ்லீம்களை வென்று வாகை சூடிய காரணத்தால் குருசடிச்சிலுவை எனவும் அறியப்பட்டது (படம் 3).

படம் 3: ஜெருசலேம் சிலுவை

இந்த இடைக்கால ஐரோப்பாவின் கிறித்துவ சின்னத்தை, இஸ்லாமியருக்கெதிரான கிறித்துவத்தின் அன்றைய போர்ச்சின்னத்தை இந்திய அரசாங்கம் இப்போது ஏன் தூசி தட்டி எடுத்து இந்திய நாணயத்தில் பொறிக்க வேண்டும்? இது குறித்து நாணயக்கிடங்கு (மின்ட்) அளித்த பதில்: " The cross is not a catholic cross but it is the concept shows (sic) a stylised representation of unity in diversity, a defining characteristic of our country. The symbol may be seen as four heads sharing a common body. It may be thought of as people from all four parts of the country coming together under one banner and identifying with one nation". அதாவது வேற்றுமையில் ஒற்றுமை என்பதைக்காட்டும் வகையில் நாற்புற மக்களையும் ஒன்றிணைப்பதைக் குறிக்கும் சின்னமாம். இது போன்ற மர்மக்குறியீட்டை சமீபத்தில் "டாவின்சி கோட்" நாவலைத் தவிர வேறெங்கிலும் நான் படித்ததில்லை. அசோகச்சின்னம்தான் அளவில் குறுக்கப்பட்டது , சிலுவையிருக்கும் பக்கத்தில்தான் ஏகப்பட்ட இடம் இருக்கிறதே, வேற்றுமையில் ஒற்றுமை என்பதைக் காட்டும் சின்னம் என்றால் குறைந்தது அச்சின்னத்துக்குக் கீழே அதனை எழுதித் தொலைக்கவாவது செய்திருக்கலாமே? இரண்டு ரூபாய் நாணயம் சாதாரணர்களிடையே மிக அதிகம் புழங்கும் நாணயம்; அவர்களுக்கெங்கே இதைப்படிக்கவெல்லாம் தெரியப்போகிறது என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. ஆனால், சாதாரணனுக்கு பார்த்தவுடன் இதில் உள்ள ஸ்டைலைஸ்டு கருத்து, வேற்றுமையில் ஒற்றுமை என்ற மர்மச்செய்தி எல்லாம் புரிந்து விடுமா என்றால் ஒரு இழவும் புரியப்போவதில்லை; ஆனால், பார்த்ததும் "அட சிலுவை!" என்று சட்டெனப் புரிந்துவிடும்தான். இச்சின்னத்திற்கும் வேற்றுமையில் ஒற்றுமைக்கும் அதிகத் தொடர்பா, அல்லது கிறித்துவ சிலுவைக்கும் அதிகத் தொடர்பா என்பதைப் படிப்பவர் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

கோவிலை வியாபாரத்தலமாக்குவதை எதிர்த்து வியாபாரிகளை ஏசு அடித்து விரட்டியடித்ததாக பைபிள் கதையொன்றில் படித்திருக்கிறேன். நாணயத்தில் போர்ச்சின்னச் சிலுவைக்குறியைப் பார்க்கையில், சிலுவை என்ற சின்னம் ஆதிக்கப்போரின் குறியீடாகத்தொடங்கி அழிவின் குறியீடாகவும் வியாபாரத்தின் குறியீடாகவும் ஆகிப் போயிருப்பதுதான் கண்கூடாகத்தெரிகிறது. ஏசு என்ற குறியீட்டின் மேல் உண்மையில் நம்பிக்கை கொண்டவர்க்கு சிலுவை என்ற சின்னம் காசில் கைமாறுவது உவப்பானதாய் இருக்கும் எனத் தோன்றவில்லை. சிறிதே வரலாறு அறிந்த முஸ்லீம்களுக்கும் குருசடிப் போர்களின் கிறித்துவ வெற்றிச் சின்னமானது பெருமிதம் தரப்போவது இல்லை. இந்துக்கள் மட்டுமே வழக்கம்போல் "ஆஹா! நமது பரந்த மனப்பான்மையைக் காட்ட மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு கிட்டி விட்டது" என்று இதனைக் கொண்டாடுவர் என்று அரசு எண்ணியதோ என்னவோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இதில் என்ன வேற்றுமையில் ஒற்றுமை என்ற வெற்று பம்மாத்து, வெங்காயம் எல்லாம் வேண்டிக் கிடக்கிறது? நிற்க.

ஒருவேளை சிலுவைச் செய்தியை இந்துப்பாவிகளிடத்தில் கொண்டு சேர்ப்பதுதான் இந்த சின்னத்தை வடிவமைத்த நிறுவனத்தின் நோக்கமோ என்ற சந்தேகம் எழவே டிசைன் செய்தது யாரென விசாரிக்க "நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன், அகமதாபாத்" தான் இதனை வடிவமைத்த அமைப்பு என இந்திய அரசின் சார்பில் "மின்ட்"டிடமிருந்து பதில் வந்தது. படைப்புத்திறனோ அழகியலோ சிறிதும் இன்றி, முந்தைய நாணயத்திலுள்ளது போன்ற இன்ஸ்பிரேஷன் தரும் கலையுணர்வோ, கற்பனையோ எதுவும் இன்றி, இப்படி ஒரு சிலுவை நாணயத்தை வடிவமைக்க இந்தியாவின் முதன்மை வடிவமைப்பு நிறுவனம் எதற்கு, லோக்கல் பங்குத்தந்தை போதுமே என்ற கேள்வி எழுந்தது.

ஏன் இந்த நிலை? தங்கமாய் பிறந்து, வெள்ளி, வெண்கலம், பித்தளை, இரும்பு என்று உருமாறி, காகிதமாய் கிழிந்து இன்னும் பல உரு எடுத்தாலும் என் மக்கள் ஏன் சந்தோசமாக இல்லை? :(