Friday, May 29, 2009

வீட்டின் முன் கோலம் - ஏன்?

ஆதி காலத்தில் மனிதன் மரங்களிலும், குகைகளிலும் வாழ்ந்து வந்தான். பின்னர் காலம் செல்லச் செல்ல சிறு சிறு வீடுகளை கட்ட ஆரம்பித்தான். அவ்வாறு வீடு கட்டும் போது, கண்ணுக்கு தெரியாத பல நுண்ணுயிர்கள் மடிந்தன. உயிர்களை கொல்வது பாவச் செயலாகும். இது மனிதனை மிகவும் வதைத்தது. ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தான்.

வீடு கட்டி முடித்த பின்னர், அரிசி மாவை மணல் போல திரித்து அதில் வீட்டின் முன் கோலம் போட ஆரம்பித்தான். கோலத்தில் இருக்கும் அரிசியை சாப்பிட எறும்பு மற்றும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் வந்தன. இதனால் உயிர்களை கொன்ற பாவங்கள் தீர்ந்து விட்டது என்று நிம்மதியாக இருந்தான். கோலமும் வீட்டின் முன் மிகவும் அழகாக இருந்தது.

ஆனால் இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, அரிசி கோலம், ரசாயன கோலமானது பின்னர் ஜவ்வு காகிதத்தில் கோலம் அச்சு அடிக்கப்பட்டு வீட்டின் முன் ஒட்டப்பட்டது. இதனால் மேலும் பல நுண்ணுயிர்கள் மடிந்தன, மடிந்து கொண்டிருக்கின்றன. இதனோடு கோல போட்டிகள் வேறு உருவானது.

அழகுக்கு முக்கியத்துவமா இல்லை உயிர்களுக்கா? செய்யும் செயலை ஏன், எதற்காக என்று தெரிந்து செய்தால் நன்மை பயக்கும். இல்லையேல் கேலிக்கும் கூத்துக்கும் இடம் கொடுக்க வேண்டும். நம் முன்னோர்கள் கோலத்தை உருவாக்கிய காரணத்தையே நாம் இன்று மறந்துவிட்டோம். இவை நமக்கு நன்மை பயக்குமா? சிந்திப்போம்! செயல்படுவோம்!

Wednesday, May 27, 2009

தாலி, மெட்டி - ஏன்?

அக்காலத்தில் தான் திருமணம் ஆனவர், திருமணம் ஆகாதவர் என்று மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தனர். இப்போது அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் அடையாள அட்டை போன்று ஒன்று வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதன்படி தாலியும், மெட்டியும் உருவானது.

தலை நிமிர்ந்து நடப்பன் ஆடவன் என்பதால் தன் எதிரே வரும் பெண் திருமணம் ஆனவள் என்பது தெரிய வேண்டும் என்பதற்காக, பெண் தாலி அணிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்கள். தலை குனிந்து நிலம் பார்த்து நடப்பவள் பெண் என்பதால் தன் எதிரே வரும் திருமணம் ஆனவர் என்று தெரிந்து கொள்வதற்காக, ஆண் மெட்டி அணிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

அதனை நடை முறைக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் இன்று நாம் இந்த காரணத்தை புரிந்து கொண்டு தாலி, மெட்டியை அணிந்து கொள்கிறோமா?

ஆஹா, பண்டைய காலத்தில் அடையாள அட்டையை கண்டுபிடித்தது எம் மக்களே!

Saturday, May 23, 2009

இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன்?

மனிதன் உயிர் வாழ பிராண வாயு தேவை. அவ்வாறே மரங்களும், செடி, கொடிகளும் உயிர் வாழ பிராண வாயு தேவை.

மனிதன் எப்போதும் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறான். மரங்களோ இரு விதமாக மூச்சு விடுகிறது. பகலில் அசுத்த காற்றை உள் வாங்கி, பிராண வாயுவை வெளிவிடுகிறது. இரவில் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறது.

எனவே, இரவில் மனிதன் மரத்தின் கீழே படுத்தால், அவனுக்கு போதுமான அளவு பிராண வாயு கிடைக்காது. மூச்சு திணறல் ஏற்படும். இக்காரணத்தினாலேயே நம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில் படுக்க கூடாது என்று கூறினார்கள். இதனை ஒரு சிலர் மறுத்து பேசினர். அவர்களுடைய உடல் நாலத்திற்க்கும் கேடு வரக் கூடாது என்பதற்காக, இரவில் மரத்தடியில் படுத்தால் பேய் அமுக்கும் என்று பயமுறுத்தி வைத்தனர்.

என்றும் சான்றோர்கள் சான்றோர்களே!

வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது - ஏன்?

இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிய வேண்டும்.

காந்தம், இரும்பு (Iron) தன்மை கொண்ட பொருட்களையும், காந்த தன்மை கொண்ட பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம் தெரியும். காந்ததிற்கு இரண்டு துருவங்கள் (Poles) உண்டு - வட துருவம் (North Pole) மற்றும் தென் துருவம் (South Pole). இயல்பாக ஒரே துருவம் விலகி கொள்ளும் (Like Poles repel each other), எதிர் துருவம் ஒன்றை ஒன்று ஈர்க்கும் (Unlike poles attract each other). எனவே, நாம் ஆய்வு கூடத்தில் (Laboratory) ஆய்வு முடிந்த பின் எதிர் துருவங்களை ஒன்றாக வைப்போம். அப்போது தான் அதன் காந்த ஈர்ப்பு தன்மை அப்படியே இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால் அதன் காந்த ஈர்ப்பு தன்மை சிதைந்துவிடும். மேலும், இயல்பாக இருக்கும் காந்தம் (Natural Magnets) தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறு சிறு காந்த துண்டுகளாக மாற்றும் தன்மை கொண்டது.

பூமி எப்படி காந்தம் ஆனது?
சூரியனின் வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்கு பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால் உருவாக்கப்படுகிறது. எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும் வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும் (Positive Current), இடதுபுறம் இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் (Negative Current) பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது.

மனிதன் எப்படி காந்தப் பொருள் ஆனான்?
மனித உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பல ரசாயன பொருட்களை கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்பு சத்து உள்ளது. இந்த சிவப்பு அணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.

எப்படி தூங்க வேண்டும்?
பூமிக்கு நான்கு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடனும் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும். எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.

Thursday, May 21, 2009

உரிமை குரல்

இரண்டு நாட்களுக்கு முன் வேலூர் சென்றிருந்தேன். வீட்டில் இருந்து கத்திப்பாரை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்க்கு சென்றிருந்தால், கோயம்பேட்டில் இருந்து வரும் வேலூர் பேருந்து ஒன்றில் ஏறி வேலூர் சென்றிருக்கலாம். ஆனால் பதினைந்து பேர் செல்வதால் கோயம்பேடு சென்றால் அனைவரும் உட்கார்ந்து செல்லலாம் என்று எண்ணி கோயம்பேடு சென்றோம். பனிரண்டு பெரியவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள். நாங்கள் நினைத்தது போல் வேலூர் பேருந்து காலியாக நின்று கொண்டிருந்தது. அனைவரும் ஏறி அமர்ந்தோம்.

பேருந்தின் இடது புறம் இரண்டு இருக்கை வரிசையும், வலது பக்கத்தில் மூன்று இருக்கை வரிசையும் இருந்தது. பேருந்தில் ஆங்காங்கே சிறுவர்களுக்கு (மூன்று வயதிற்கு மேற்பட்டவர்கள்) அரை பயனச்சீட்டு வாங்க வேண்டும் என்று எழுதி இருந்தது. இது பேருந்தில் பயணிபவர்களுக்கான விதிமுறை. அவ்வாறு அரை பயணச்சீட்டு வாங்கப்படும் குழந்தைகளுக்கு, இருக்கை இருந்தால் உட்கார்வதற்கு முழு இருக்கை தர வேண்டும் என்பதும் பேருந்தில் பயணிபவர்களுக்கான விதிமுறையே.

இவ்வாறு இருக்க, பேருந்து நடத்துனர் அடுத்த அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஆட்களை ஏற்றும் போது பேருந்தில் இடம் இருப்பதாக கூறி, ஆட்களை ஏற்றி, என்னிடம் வந்து தள்ளி உட்கருமாறு கூறினார். நானும் இடம் கொடுக்க அருகில் அமர்ந்தவாறோ என்னை மேலும் மேலும் தள்ள குழந்தைகள் திணற ஆரம்பித்தனர். அருகில் அமர்ந்தவரிடம், திரும்பி உட்கருமாறு கூறினென். அப்படி உட்கார்ந்தால் அவரது கால் நடை பாதையில் இருக்கும். அவர் மறுத்து, குழந்தைகள் தானே என்று அதிகரமாக கூறினார். உடனே, பேருந்து நடத்துநரை அழைத்தேன்.

நடத்துனர் அருகில் வந்தார். இரண்டு அரை பயனச் சீட்டுக்கு ஒரு இருக்கை தான் தர முடியும் என்றும் நான் அருகில் அமர்ந்து இருப்பவருடன் ஒத்துபோக வேண்டும் என்றார். இரண்டு அரை பயணச்சீட்டு என்பது கணக்கு படி ஒரு பயனசீட்டின் விலை தான். ஆனால் பேருந்தின் விதி முறைப்படி இரண்டு இருக்கைகளுக்கு சமம். நான் மற்றவருடன் ஒத்துபோக மாட்டேன் என்று கூறவில்லை. ஒத்துபோக வேண்டும் என்பதற்காக நான் கஷ்டப்பட விரும்பவில்லை. மேலும் ஒத்துபோவது என்பது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். என் அருகில் அமர்பவர் ஒத்துபோகாத போது என்னால் மட்டும் எப்படி சாத்தியம்? அதுவும் மூன்று மணி நேரம் இரண்டு குழந்தைகளுடன். பேருந்து நடத்துனர் தனது கட்டுபாட்டில் உள்ள பேருந்தில் அதிக வருமானம் காட்ட வேண்டும் என்பதற்காக பேருந்தில் பயணிக்கும் பயணிகளை கஷ்டபடுத்துவதில் என்ன நியாயம்?

எனவே என் குடும்பத்தினர் அனைவரும் எப்படி அது சாத்தியம் என்று வினவ, பேருந்தில் ஒரே கூச்சல். நான் பேருந்தின் விதி முறைப்படி இரண்டு இருக்கை தான் தர வேண்டும் என்றும் என்னால் கஷ்டப்பட முடியாது என்றும் நான் கோயம்பேட்டில் இருந்து இருக்கைகாக சுற்றி வந்திருக்கிறேன் என்றும் கூறினேன். உடனே நடத்துனர் அமைதியனார். ஆனால் என் அருகில் அமர்ந்திருந்தவருடன் வந்திருந்தவர்கள் தாங்கள் பொது மக்கள் என்று கூற, என் குடும்பத்தினர் சிரித்துவிட்டனர். பேருந்து நடத்துனாரோ அந்த நபரை அழைத்து தனது இருக்கையில் அமர செய்தார். நான் என் குழந்தைகளுடன் நிம்மதியாக வேலூர் வந்து சேர்ந்தேன்.

பொது மக்களுக்கு ஏன் பொது அறிவு இல்லாமல் போனது? தினந்தோறும் பயணம் செய்யும் பேருந்தின் விதி முறைகள் ஏன் தெரியாமல் போயிற்று? அரசு என்ன சட்டம் கொண்டு வருகிறது என்று பொது மக்களுக்கு ஏன் தெரியவில்லை? இந்த விழிப்புனர்வை எவ்வாறு பொது மக்களுக்கு கொண்டு சேர்ப்பது. சட்டம், நம் நன்மைக்கு தான் என்று தெரியாமல் இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்க போகிறோம்? அன்பார்ந்த தமிழ் இனமே விழித்து கொள்! உனக்காக அரசு உருவாக்கி உள்ள நல்ல திட்டங்களை பயன்படுத்து!

என்றும் வாழ்க வளர்க நிம்மதியுடன்!

Tuesday, May 12, 2009

ஒரு இடத்திற்கு கிளம்பும்போது பூனை குருகிட்டால் சிறிது நேரம் உட்கார வேண்டும் - ஏன்?

அன்றைய சூழல்:-

சாலைகள் இல்லாத காலம். காட்டு வழியே நடந்து செல்ல வேண்டிய காலம். காடு, மிருகங்கள் வாழும் இடம் என நமக்கு தெரியும். சிங்கம் மற்றும் பூனை(Cat Family) வகையை சேர்ந்த புலி இவைகளுக்கு பசி எடுத்தால் என்ன செய்யும் என்று நமக்கு நன்கு தெரியும்.
இரண்டு விஷயங்கள் நடக்க கூடும்:-
ஒன்று, மிருகங்கள் நம்மை அடித்து சாப்பிட கூடும்.
இரண்டு, நாம் மிருகங்களை கொன்றுவிட நேரும்.
விளைவு:-
உயிர் சேதம் மட்டுமே! போய் சேர வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாது.
முடிவு:-
ஒரு இடத்திற்கு கிளம்பும்போது பூனை (Cat Family) குருகிட்டால், சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு அந்த பூனை சென்ற பின் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இன்றைய சூழல்:-
நம்மை சுற்றி எப்போதும் போக்குவரத்து நெரிசல் தான். நாமாக விரும்பி காட்டுக்குள் சென்று பூனை வகையான புலியை கட்டி உருண்டால் தான் உயிர் இழப்பு.
என்ன செய்யலாம்?
வீட்டு பூனையை கண்டு, அதை குறை கூறி வீட்டில் ஓய்வு எடுக்கலாமா? இல்லை நம் வேலையை பார்க்கலாமா?

சூரியன் மறைந்த பின் வீடு பெருக்க கூடாது - ஏன்?

அன்றைய சூழல்:-
மின்சாரம் கண்டுபிடிக்காத அக்காலத்தில், அகல் விலக்குகள் தான் வீடுதோறும் இருக்கும். மேலும் வீட்டை சுற்றிலும் மரம், செடி, கொடி என இயற்க்கை சூழ்ந்து இருக்கும்.

இரண்டு விஷயங்கள் நடக்க கூடும்:-
ஒன்று, சூரியன் மறைந்த பின்னர் பாம்பு போன்ற விஷத்தன்மை கொண்ட பூச்சிகள் இதமான வெப்பதிற்காக வீட்டினுள் தஞ்சம் அடையும்.
இரண்டு, நாம் கை தவறி ஏதேனும் விலை மதிப்பற்ற பொருளை கீழே போட்டுவிட கூடும்.

விளைவு:-
ஒன்று, நம்மை அறியாமல் தஞ்சம் புகுந்த பூச்சிகளை தொந்தரவு செய்து அதன் கோபத்திற்கு ஆளாக கூடும்.
இரண்டு, விலை மதிப்பற்ற பொருளை குப்பையில் போட்டுவிட கூடும்.

எது எப்படியோ பின் விளைவுகள் நமக்குத்தானே.

முடிவு:-
சூரியன் மறைந்த பின் வீடு பெருக்க வேண்டாம்.

இன்றைய சூழல்:-
நம்மை சுற்றி எப்போதும் வெளிச்சம் தான். நாமாக பார்த்து விளக்கை அணைத்தால் தான் இருட்டு. மேலும் இன்றைய கால கட்டத்தில் நம் வீட்டை சுற்றி அடுக்கு மாடி கட்டிடங்களும், நெடும் சாலைகளும் மட்டுமே உள்ளதால் இயற்க்கைக்கு வழியே இல்லை.

என்ன செய்யலாம்?

சூரியன் மறைந்த பின் வீடு பெருக்கலாமா வேண்டாமா?

மற்ற செயல்கள் - இதே காரணம்
அ) இரவில் நகம் வெட்டுவது
ஆ) தலை வாறுவது

Tuesday, May 5, 2009

நாணயம்

பெயர் காரணம்:

நாணயம் என்றால் "நேர்மை" என்று பொருள். கொடுப்பவரும் பெற்றுக்கொள்பவரும் நாணயத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக எனக்கு இந்த பெயர். இப்போது நான் உருவான வரலாறை பார்போமா?

உருவான காரணம்:

முதலில் பண்டமாற்று (Exchanging things) முறையில் தான் கொடுக்கல் வாங்கல் நடைபெறத் துவங்கியது. தன்னிடம் அதிகமுள்ளவற்றைக் கொடுத்து இல்லாதவற்றை (எதிர் தரப்பினரிடம் அதிகமாக இருப்பதை) பெறுதல்.

தேவைகள் அதிகமாக அதிகமாக பண்டமாற்று அவ்வளவாக ஒத்து வரவில்லை. நாம் கொடுக்கத் தயாராக இருக்கும் பொருள் எதிர்தரப்பினருக்கு தேவைப் படாவிட்டால்...? அவர்களுக்கு என்ன தேவை என்று பார்த்து, அது யாரிடம் உள்ளது என்று தேடி அவர்களிடம் நம் பொருளைக் கொடுத்து (ஒரு வேளை அவர்களுக்கும் அது வேண்டாம் என்றால்?!)...

இதெல்லாம் வேண்டாம், பேசாமல் ஒரு அளவுகோல் வைத்துக் கொள்வோம் (ஒரு சிறிய தங்கம் அல்லது வெள்ளியாலான வில்லை.). எல்லாப் பொருள்களுக்கும் அதன் மதிப்பை இந்த வில்லைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடுவோம். அரிசி - 5 வில்லை, மீன் - 2 வில்லை, உப்பு - 1 வில்லை, இது மாதிரி தேவைக்கும், உற்பத்திக்கும் தகுந்தவாறு விலை நிர்ணயம் செய்து கொள்வோம் என்று கூடிப் பேசியதன் விளைவு தான் பணம்.

இதனால் வியாபாரம் பெரிய அளவில் அதிகரித்தது. நம்மிடமுள்ள பொருளுக்கு யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அங்கு விற்று நமக்கு தேவையானதை யார் குறைந்த விலையில் தருகிறார்களோ அங்கு வாங்கலாம் என்ற வசதி உண்டாயிற்று (Business).

பணத்தின் வகைகள்:
முதலில் பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட உலோகத்தின் மதிப்பைக் கொண்டு மதிப்பிடத் தொடங்கினார்கள். தங்க நாணயம் என்றால் அதில் உள்ள தங்கத்தின் எடை தான் அந்த நாணயத்தின் மதிப்பு. இது கிட்டதட்ட பண்டமாற்று முறை தான். தங்கம், வெள்ளி, பித்தளை பின்னர் வெண்கலம், இரும்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட நாணயங்கள் உபயோகிக்கப்பட்டன. இவை Commodity Money எனப்படும்.

இதற்கடுத்த முறை Credit Money எனப்படுவது. தங்கத்தை நாணயமாக்கி உபயோகிப்பதற்கு பதிலாக அரசாங்கம் தங்கத்தை தன் இருப்பில் வைத்துக் கொண்டு அதன் மதிப்பிற்கு ஒரு தாளில் உத்தரவாதம் அளித்து (அதாவது இந்த தாளைக் கொண்டு வருபவர்களுக்கு இந்த மதிப்பிற்கு உரிய அளவு தங்கம் அளிக்கப்படும்.). இது கிட்டதட்ட ஒரு பத்திரம் மாதிரி தான் (Cheque / Document). பணம் நோட்டுக்களாக மாறத் தொடங்கியது.

தாளை வாங்கிக் கொண்டு உலோகத்தை தரும் உத்தரவாதம் (Acknowledgement) எதுவும் இல்லாமல் இந்த நோட்டின் மதிப்பு இது என்று அரசாங்கத்தின் ஆணையால் ஒரு நாட்டில் பணமாக உபயோகிக்கும் முறைக்கு பியட் என்று பெயர் (Fiat money). யு.எஸ்.ஏ. வின் பணம் இவ்வகையானது தான். (This note is legal tender என்று எழுதப்பட்டிருக்கும்). தற்போது உபயோகத்திலிருக்கும் நாணயங்களும் இந்த வகையைச் சேர்ந்தது தான். ஏனென்றால் இந்த நாணயங்களிலுள்ள உலோகத்தின் மதிப்பு அந்த நாணய மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.

ஆனால் ஒரு அரசாங்கம் இஷ்டத்திற்கு பணம் அச்சடித்து புழக்கத்தில் விட்டால் அதன் மதிப்பு குறைந்து விடும்.

எனக்கு மதங்கள் தெரியாது! இருப்பினும்.....
முன்பிருந்த இரண்டு ரூபாய் நாணயத்தில் தேசத்தின் படமும் அதன் முழுப்பரப்பிலும் விரிந்து பறக்கும் தேசியக்கொடியும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அசோகமுத்திரையான சிங்கங்களும் அதன் கீழே "சத்யமேவ ஜெயதே" என்ற விருதுவாக்கும் கம்பீரமாக இடம்பெற்றிருந்தன. இப்போது இந்திய அரசு வெளியிட்டுள்ள இரண்டு ரூபாய் நாணயத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் உள்ளன (படம் 1):








படம் 1: சிலுவைக்கே முதலிடம்- அசோகச்சின்னம் குறுக்கப்பட்டது

- தேசத்தின் படமும் தேசியக்கொடியும் அறவே நீக்கப்பட்டு விட்டன.

- அசோக முத்திரை உள்ள பக்கம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு அந்த மூன்றில் ஒரு பகுதியில் (நடுப்பகுதியில்) அளவில் சுருக்கப்பட்டு 2 என்ற எண்ணுடன் இடத்தை பகிர்ந்து கொண்டபடி அசோகச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

- அசோகச்சின்னமே அளவில் சிறிதாக்கப்பட்டு விட்டதால், அதன் கீழே உள்ள "சத்யமேவ ஜெயதே" என்ற வாக்கியம் லென்ஸ் வைத்துப்பார்க்க வேண்டிய அளவிற்கு மிகமிகச்சிறியதாகக் குறுக்கப்பட்டுள்ளது.

- ஆனால், நாணயத்தின் மறுபுறத்திலோ மிகத் தெளிவாகவும் பெரிதாகவும் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் சிலுவைச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது- அதுவும் "ஜெருசலேம் சிலுவை" என்றும் குருசடிச்சிலுவை என்று அறியப்படும் "crusader's cross"

இந்த சின்னத்தின் மூலாதாரம் 9-ஆம் நூற்றாண்டின் கிறித்துவ மன்னன் லூயியின் (Louis the Pious) நாணயத்தில் உள்ளது. (படம் 2: "லூயி மன்னனின் கிறித்துவ நாணயம்").

படம் 2: லூயி மன்னனின் கிறித்துவ நாணயம்

இதில் உள்ள பெசன்ட் எனப்படும் நாற்புள்ளிகளுக்கு- நான்கு திசைகளிலும் சென்று கிறித்துவின் நற்செய்தி பரப்பவேண்டிய அவசியத்தைச் சுட்டுவது; மற்றும் மத்தேயு, மார்க், லூக்கா, யோவான், என்ற நான்கு முக்கிய கிறித்துவ நற்செய்தி லிபியங்களைக் குறிப்பது - என்று இரண்டு வகை விளக்கங்கள் முக்கியமாகத் தரப்படுகின்றன. இந்த சின்னமே பின்னர் ஜெருசலேம் சிலுவையாக மாறி முஸ்லீம்களிடமிருந்து ஜெருசலேத்தை மீட்க போப் இரண்டாம் அர்பன் தொடுத்த முதல் சிலுவைப்போரில் கிறித்துவப் படையின் ஆயுதச்சின்னமாக விளங்கியது. முதல் சிலுவைப்போரில் முஸ்லீம்களை வென்று வாகை சூடிய காரணத்தால் குருசடிச்சிலுவை எனவும் அறியப்பட்டது (படம் 3).

படம் 3: ஜெருசலேம் சிலுவை

இந்த இடைக்கால ஐரோப்பாவின் கிறித்துவ சின்னத்தை, இஸ்லாமியருக்கெதிரான கிறித்துவத்தின் அன்றைய போர்ச்சின்னத்தை இந்திய அரசாங்கம் இப்போது ஏன் தூசி தட்டி எடுத்து இந்திய நாணயத்தில் பொறிக்க வேண்டும்? இது குறித்து நாணயக்கிடங்கு (மின்ட்) அளித்த பதில்: " The cross is not a catholic cross but it is the concept shows (sic) a stylised representation of unity in diversity, a defining characteristic of our country. The symbol may be seen as four heads sharing a common body. It may be thought of as people from all four parts of the country coming together under one banner and identifying with one nation". அதாவது வேற்றுமையில் ஒற்றுமை என்பதைக்காட்டும் வகையில் நாற்புற மக்களையும் ஒன்றிணைப்பதைக் குறிக்கும் சின்னமாம். இது போன்ற மர்மக்குறியீட்டை சமீபத்தில் "டாவின்சி கோட்" நாவலைத் தவிர வேறெங்கிலும் நான் படித்ததில்லை. அசோகச்சின்னம்தான் அளவில் குறுக்கப்பட்டது , சிலுவையிருக்கும் பக்கத்தில்தான் ஏகப்பட்ட இடம் இருக்கிறதே, வேற்றுமையில் ஒற்றுமை என்பதைக் காட்டும் சின்னம் என்றால் குறைந்தது அச்சின்னத்துக்குக் கீழே அதனை எழுதித் தொலைக்கவாவது செய்திருக்கலாமே? இரண்டு ரூபாய் நாணயம் சாதாரணர்களிடையே மிக அதிகம் புழங்கும் நாணயம்; அவர்களுக்கெங்கே இதைப்படிக்கவெல்லாம் தெரியப்போகிறது என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. ஆனால், சாதாரணனுக்கு பார்த்தவுடன் இதில் உள்ள ஸ்டைலைஸ்டு கருத்து, வேற்றுமையில் ஒற்றுமை என்ற மர்மச்செய்தி எல்லாம் புரிந்து விடுமா என்றால் ஒரு இழவும் புரியப்போவதில்லை; ஆனால், பார்த்ததும் "அட சிலுவை!" என்று சட்டெனப் புரிந்துவிடும்தான். இச்சின்னத்திற்கும் வேற்றுமையில் ஒற்றுமைக்கும் அதிகத் தொடர்பா, அல்லது கிறித்துவ சிலுவைக்கும் அதிகத் தொடர்பா என்பதைப் படிப்பவர் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

கோவிலை வியாபாரத்தலமாக்குவதை எதிர்த்து வியாபாரிகளை ஏசு அடித்து விரட்டியடித்ததாக பைபிள் கதையொன்றில் படித்திருக்கிறேன். நாணயத்தில் போர்ச்சின்னச் சிலுவைக்குறியைப் பார்க்கையில், சிலுவை என்ற சின்னம் ஆதிக்கப்போரின் குறியீடாகத்தொடங்கி அழிவின் குறியீடாகவும் வியாபாரத்தின் குறியீடாகவும் ஆகிப் போயிருப்பதுதான் கண்கூடாகத்தெரிகிறது. ஏசு என்ற குறியீட்டின் மேல் உண்மையில் நம்பிக்கை கொண்டவர்க்கு சிலுவை என்ற சின்னம் காசில் கைமாறுவது உவப்பானதாய் இருக்கும் எனத் தோன்றவில்லை. சிறிதே வரலாறு அறிந்த முஸ்லீம்களுக்கும் குருசடிப் போர்களின் கிறித்துவ வெற்றிச் சின்னமானது பெருமிதம் தரப்போவது இல்லை. இந்துக்கள் மட்டுமே வழக்கம்போல் "ஆஹா! நமது பரந்த மனப்பான்மையைக் காட்ட மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு கிட்டி விட்டது" என்று இதனைக் கொண்டாடுவர் என்று அரசு எண்ணியதோ என்னவோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இதில் என்ன வேற்றுமையில் ஒற்றுமை என்ற வெற்று பம்மாத்து, வெங்காயம் எல்லாம் வேண்டிக் கிடக்கிறது? நிற்க.

ஒருவேளை சிலுவைச் செய்தியை இந்துப்பாவிகளிடத்தில் கொண்டு சேர்ப்பதுதான் இந்த சின்னத்தை வடிவமைத்த நிறுவனத்தின் நோக்கமோ என்ற சந்தேகம் எழவே டிசைன் செய்தது யாரென விசாரிக்க "நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன், அகமதாபாத்" தான் இதனை வடிவமைத்த அமைப்பு என இந்திய அரசின் சார்பில் "மின்ட்"டிடமிருந்து பதில் வந்தது. படைப்புத்திறனோ அழகியலோ சிறிதும் இன்றி, முந்தைய நாணயத்திலுள்ளது போன்ற இன்ஸ்பிரேஷன் தரும் கலையுணர்வோ, கற்பனையோ எதுவும் இன்றி, இப்படி ஒரு சிலுவை நாணயத்தை வடிவமைக்க இந்தியாவின் முதன்மை வடிவமைப்பு நிறுவனம் எதற்கு, லோக்கல் பங்குத்தந்தை போதுமே என்ற கேள்வி எழுந்தது.

ஏன் இந்த நிலை? தங்கமாய் பிறந்து, வெள்ளி, வெண்கலம், பித்தளை, இரும்பு என்று உருமாறி, காகிதமாய் கிழிந்து இன்னும் பல உரு எடுத்தாலும் என் மக்கள் ஏன் சந்தோசமாக இல்லை? :(